தொலைவில்
ஒன்றாய் தெரிந்தது
அருகில்
வேறொன்றாய்…
அருகில்
ஒன்றாய் தெரிந்தது
தொலைவில்
வேறொன்றாய்…
தவறென
முதலில் பட்டது
சரியானதாய்
முடிவில்…
புரியாத
விஷயமாய் முதலில்
புரிந்ததாய்
முடிவில்…
அவசரம்,
அணுகுமுறையில்
தவறுக்கே இழுக்க
பொறுமையே
சரியாக…
அவசரமான
காலத்தில் கடைபிடித்த பொறுமையோ
அவசரமாய்
தவறாக…
சரியான
பாதைக்கு என்னதான் செய்ய???
குழப்பத்திற்கு
விடைத் தேடுகையில்
தெளிவாக
உள்ளம் கேட்டது….
சரியென்று
எண்ணும் இன்றைய பதில்
தவறென்று
நாளை ஆனால்???
No comments:
Post a Comment