மனது...
ஒரு புறம்
தவறுகளை தெரிந்தே செய்யும் போழ்து
குமைந்து கொல்கிறது.!
மறுபுறம்
தவறுகளைச் சரியானதாக்கி
ஏமாற்றிவிட பிரம்மப்பிரயத்தனம் செய்கிறது.!
தவறுகளைச் சரியாக்கிவிட்டதாய்
செயலை முடிக்க
தவறு தவறாகவே நிற்கிறது...
தவறைச் சரியாக்க
கிளம்பியதின் மிச்சங்கள் எல்லாம்
எச்சமாய் மேனியெங்கும்...
அருவருக்கத்தக்க
தவறுகளை மறைத்தபடி...
புண்ணுக்கு பூசிய புணுகாய்.!
No comments:
Post a Comment