Saturday, February 16, 2013

நூலைப் போல

நூலைப் போல..


முப்பது வருடங்களுக்கு முன்பு…

என்னங்க, உங்களைத்தான்… இங்க கொஞ்சம் வாங்களேன்.!

ஏன்டி, இப்படி ஊருக்கே கேட்குறாப்புல கத்துற.! வந்துட்டு தானே இருக்கேன். அதுக்குள்ள என்ன அவசரம்…

இங்க பாருங்க… உங்க பையன் என்ன காரியம் செஞ்சு வச்சிருக்கான்னு நீங்களே பாருங்க…

ஹி ஹி ஹி…

என்ன சிரிக்குறீங்க? நேத்து தான் பெட்ஷீட்டைத் துவைச்சுப் போட்டேன், தெரியுமா? குளிப்பாட்டி வந்து பெட்ல போட்டுட்டு அலமாரியில இருந்து துணி எடுத்து வந்து பார்க்குறேன், அதுக்குள்ள இப்படி பெட்ஷீட் புல்லா ஈரம் பண்ணி வைச்சிருக்கான்… உங்களுக்கு சிரிப்பா இருக்கா??? உங்களுக்கும் உங்க பையனுக்கும் என்ன வந்துச்சு… நான் ஒருத்தி சம்பளமில்லா வேலைக்காரி கிடைச்சிருக்கேனில்ல… நல்லா சிரிங்க…

ஏன்டி கத்தி கூப்பாடு போடுற… குழந்தைங்கன்னா அப்படித்தான்… இதுக்கா ஊருக்கே கேட்குறாப்புல கத்திட்டு இருக்க… சரி, நீ போ… போய் அடுப்படியைக் கவனி… நான் இவனுக்கு துணி மாத்திட்டு, பெட்ஷீட்டையும் மாத்தி வைக்குறேன்… போதுமா…

போதுமே.! உங்க புள்ளைய ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே… என் வாயை அடைச்சுடுவீங்களே. என்னமோ செய்யுங்க, நீங்களாச்சு உங்க புள்ளையாச்சு…

இன்று.!

ஏம்மா, இப்படி படுத்துற…. பக்கத்துல தானே பெட்பேன் இருக்கு. எடுத்து யூஸ் செய்யலாமில்லை…

(சற்று முனகலுடன்) எழுந்திரிச்சு எடுக்குறதுக்குள்ள இப்படி ஆயிடுச்சுடா…
மாசத்துக்கு எத்தனை பெட் தான் வாங்குறதோ… இதுக்கே நான் தனியா சம்பாதிக்கணும் போல…

என்ன ஆச்சுப்பா, ஐயையோ பெட்ல ஈரம் போயிட்டாளா… சரி சரி, நீ டென்ஷனாவாம ஆபிஸ் கிளம்பு… நான் சுத்தம் செஞ்சுடுறேன்…

போதும்பா… அம்மாவை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே. உடனே பரிஞ்சு பேச வந்துடுவீங்களே.! என்னமோ செஞ்சு தொலைங்க… நான் கிளம்புறேன். எல்லாம் என் தலையெழுத்து...

No comments:

Post a Comment