Tuesday, April 23, 2013

மதில் மேல்


உரசி விட்டு
ஒன்றுமறியாதவனாய் நிற்கிறான்...
கூட்டத்தினூடே.!

அருகருகே இருந்தவை
விலகி நிற்கின்றன

உரசலா.!!! விரிசலா.!!!

***********************************


கல்லெறிந்து விட்டு
காணாமல் போனான்...
காற்றாக.!

கண்ணாடித் தண்ணீர்
கடல் அலையாய்

கலங்குமா??? நிலைக்குமா???

***********************************


காதலிக்கிறீர்களா
கேட்டு விட்டு மறைந்தான்...
கணப்பொழுதில்.!

பிணைப்பில் இருந்தவை
பிரிவைத் தேடின

நட்பா... காதலா...


No comments:

Post a Comment