உரசி விட்டு
ஒன்றுமறியாதவனாய் நிற்கிறான்...
கூட்டத்தினூடே.!
அருகருகே இருந்தவை
விலகி நிற்கின்றன
உரசலா.!!! விரிசலா.!!!
***********************************
கல்லெறிந்து விட்டு
காணாமல் போனான்...
காற்றாக.!
கண்ணாடித் தண்ணீர்
கடல் அலையாய்
கலங்குமா??? நிலைக்குமா???
***********************************
காதலிக்கிறீர்களா
கேட்டு விட்டு மறைந்தான்...
கணப்பொழுதில்.!
பிணைப்பில் இருந்தவை
பிரிவைத் தேடின
நட்பா... காதலா...
No comments:
Post a Comment