Saturday, June 1, 2013

வறட்டு கௌரவம்

கௌரவம் தெரியும். வறட்டு கௌரவம் தெரியுங்களா. எல்லோரும் இந்த வறட்டு கௌரவத்தைப் பத்தி ஓரளவு தெரிஞ்சு வச்சிருந்தாலும் தனக்குன்னு வரும் போது மறந்துடறோம். என்னையும் சேர்த்து எல்லோருமே ஏதாவது ஒரு சமயத்தில் இந்த வறட்டு கௌரவத்தைப் பார்க்காத மனுஷன்னு யாரும் இருக்குறதா எனக்குத் தெரியலை...

சேச்சே, நான் எல்லாம் அப்படி இல்லைப்பா... இந்த வறட்டு கௌரவம், போலி கௌரவத்தோட எல்லாம் நான் இல்லைப்பா அப்படின்னு சொல்றீங்களா... செத்த நேரம் அப்படியே முழுசா இந்த பதிவை படிச்சுடுங்க...

முதல்ல நாம வறட்டு கௌரவத்தோட இருக்குறமா இல்லையானு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னால வறட்டு கௌரவம் அப்படின்னா என்னனு தெரிஞ்சுக்கலாம். உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள முடியாமல், நிஜத்தை நிஜமாக ஒப்புக் கொள்ள முடியாமல் நம்மைத் தடுக்கும் உணர்வு தான் இந்த வறட்டு கௌரவம்.

உள்ளதை உள்ளபடி ஏத்துக்குறது அப்படின்னா என்னனு கேட்குறீங்களா... காலையில் பல் தெய்க்குறதுல ஆரம்பிச்சு படுக்கப போற வரைக்கும் ஆயிரத்தெட்டு உதாரணம் சொல்லலாம்.. அப்படி நாம வறட்டு கௌரவம் பார்க்கும் சில விஷயங்கள் இதோ...

என்னது பல் விளக்க பேஸ்ட் இல்லையா... பேஸ்ட் கூட வாங்கி வைக்காம வீட்ல எல்லாம் அப்படி என்ன வெட்டி முறிக்குற வேலை செய்றீங்க... இப்படி சில பேர் காலையிலேயே சாமியாடுவாங்க... பேஸ்ட் இல்லைன்றதுக்கு அர்த்தம் அவர் உபயோகப்படுத்தும் பிராண்ட் பேஸ்ட் இல்லைன்றதாவும் இருக்கலாம். ஏன்யா, தண்ணியில ஆரம்பிச்சு செங்கல் தூள், சாம்பல், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி பல்பொடி இப்படி பலதை வைச்சு பல் தேய்ச்சது தானே நம்ம முன்னோர் இனம். இப்ப பிராண்டட் பேஸ்ட் இல்லைன்னா குடியா முழுகிடும்... இப்படியே சோப்பு, சீப்பு, டாய்லெட், போட்டுக்குற சட்டை இப்படி எல்லாத்துக்கும் சொல்லிட்டுப் போகலாம்...

இப்படி எல்லாம் நான் செய்றதில்லைப்பா அப்படின்னு இன்னும் சொல்லுறவங்க அடுத்து வாங்க...

அடுத்தது என்ன பயணம் தான்... எங்க வெளியே போகனும்னாலும் வண்டி வேணும்னு சொல்றவங்க... வண்டி கூட தனக்கு விருப்பமானதா இருக்கணும். தப்பித் தவறி பேருந்துல இவங்க ஏறிட்டாலும் பக்கத்துல இருக்குறவங்களை இவங்க பார்க்குற பார்வை இருக்கே... எப்பா, ஆண்டான் அடிமைத்தனம் தோத்துடும் போங்க... என்னோட தகுதிக்கு நான் சேர் ஆட்டோவுல வர்றதா... ஸ்லீப்பர் கோச்தானா, ஏசி இல்லையா... ஏன் அல்ட்ரா டீலக்ஸ்ல புக் செஞ்சிருக்கலாமே இப்படி பல ரகமா பயணத்துல வறட்டு கௌரவம் பார்க்குறவங்க இருக்காங்க...

அப்புறம் ஆபிஸ்ல உட்கார்ர இடத்துல கூட சிலர் வறட்டு கௌரவம் பார்ப்பாங்க... என்னோட கேடர். ரேங்க் தான அவனும்... அவனுக்கு மட்டும் ஏன் தனி ரூம்... எனக்கு ஏன் இல்லை அப்படின்னோ... என்னோட ரேஞ்சுக்கு எனக்கு தனி ரூம் இல்லைனா ஐ பீல் அன்கம்பர்டபில்யா... அப்படின்னு சொல்றவங்களையும் பார்க்கும் போது அப்படியே மூக்குல நச்சுனு குத்தலாம் போலத் தோணும்...

சாப்பாடு... பசிக்கு வயத்தை நிரப்ப எதாச்சும் சாப்பிடுடான்னா அதை விட்டுட்டு டீசன்சி மெயிண்டெயின் செய்றேன்னு சில பேரு ஸ்பூன்ல சாப்பிடத் தெரியாம நுனி நாக்குல நாலு வாய் சாப்டுட்டு, ஐ ஆம் டேன் பா... ஐ ஆம் இன் டயட் யூ நோ... அப்படின்னு பீலா வுட்டுட்டு கொலை பசியோட ஆபிஸ்ல உட்கார்ந்திருந்துட்டு வீட்டுக்குப் போனதும் கைல கெடைச்சதை எல்லாம் வாயில போட்டுக்குறதைப் பார்க்கும் போது... டே, இந்த பொழப்புக்கு அப்படின்னு ஏதாச்சும் திட்டனும் போல இருக்கும்...

அடுத்து, உறக்கம்... ஏசியில பொறந்து வளர்ந்த மாதிரி, தூங்க ஏசி ரூம் இல்லையா, கட்டில் இல்லையா, பெட் இல்லையா அப்படின்னு ஆரம்பிச்சு மொஸ்கிட்டோ லிக்விட் இல்லையா, கையில் தானா அப்படின்னு சொல்லும் போது, டேய், டேய் டேய் கட்டாந்தரையில வேப்பிலை புகையைப் போட்டு உட்டுட்டு படுத்து தூங்குனவங்க வழியில வந்துட்டு ஏதோ வெள்ளைக்காரன் ஊருல பொறந்தாப்புல பேசுறியேடா அப்படின்னு பலதும் கேட்கத் தோணும்... ஹ்ம்ம் என்ன செய்றது...

உண்மையிலேயே மேல சொன்ன மாதிரி உள்ளதை உள்ளபடி எடுத்துகிட்டு வாழாம வெட்டியா பேசுறது மட்டும் தான் நாம எல்லாம் வறட்டு கௌரவம்னு நினைச்சுக்கிட்டிருக்கோம்... அதனால பெரும்பாலும் நாம இதை தவிர்த்துடுறோம்...

ஆனா இதை எல்லாம் விட இன்னொரு விஷயம் இருக்கு வறட்டு கௌரவமா... அது நிஜத்தை நிஜமா ஒப்புக்க மறுக்குறது...

அது என்ன நிஜத்தை நிஜமா ஒத்துக்குறதுண்றீங்களா. நாம் அன்றாடம் செய்யும் பல காரியங்களில் நம்மையே அறியாமல் சில தவறுகளைச் செய்வோம். ஆனால் அந்த தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மறுப்போம். உப்பு சப்பில்லாத விஷயமே ஆனாலும் நாம சரின்னு சொன்ன தப்பான ஒரு விஷயத்தை நமக்கும் தப்புன்னு தெரிஞ்ச பிறகும் ஒத்துக்கிட மாட்டோம்... நாம் செய்த காரியத்தைச் சரியென்று நிரூபிக்க பொய் மேல் பொய்யாய் சொல்லுவதும், தாம் கொண்ட கருத்து தவறென்று தெரிந்த பிறகும், அந்த தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மறுப்பதும் கூட வறட்டு கௌரவம் பார்ப்பது தான்...

இன்னும் சிலர் இதை நாசூக்கா செய்வாங்க... எப்படின்னு கேட்கறீங்களா... தான் செஞ்சது/தனது கருத்து தவறுன்னு தெரியாத வரைக்கும் வாய்கிழிய சண்டை போடுவாங்க... தவறுன்னு தெரிஞ்சுட்டாலோ அப்படியே சைலண்ட் ஆயிடுவாங்க... ஏன்னா இவங்க மனசாட்சி இவங்க தப்பான கருத்தை பேச விடாது... அவங்களோட வறட்டு கௌரவம் தன்னோட கருத்தை தப்புன்னு மத்தவங்க கிட்ட ஒத்துக்க விடாது...

இப்படி எல்லாம் எதுவும் இல்லாம, வறட்டு கௌரவமே பார்க்காம நான் வாழுறேன்னு யாராச்சும் இருந்தா உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக்குங்க... ஏன்னா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம்  யாரும் உங்களை பாராட்ட மாட்டாங்க...

No comments:

Post a Comment