Friday, May 21, 2010

கிறுக்கல் - 41

அவசரமாய் ஏறும் பேருந்தில்
அமர்வதற்காய் ஒரு இடம்
ஓடிய களைப்பு தீர
ஆசுவாசத்திற்காக பாட்டில் தண்ணீர்
எழுதாமல் விட்ட பாடங்களை
எழுதித் தருமோர் கை
பேசத் தயங்கும் போது
தைரியம் தரும் பார்வை
தோல்வியில் துவண்ட போது
தாங்கக் கொடுக்கும் தோள்
பல பேர் முன்னிலையிலும்
பேசிக் கொள்ள கண்கள்
வேற்றி மட்டுமே கிடைக்க
கடவுளை வேண்டிய இதயம்
எல்லாம் இழந்து தனிமரமாய்
தோழியிடம் சொன்ன காதல்..

1 comment:

கவிநா... said...

இதான்னா பிரச்சினையே, ஆண் பெண் நட்புக்குள்ளே. இருந்தாலும் நண்பர்களா நீடிச்சிருந்திருக்கலாம். உங்க கவிதை நாயகியால் முடியலை போல. ம்ம்ம்

Post a Comment