Wednesday, September 1, 2010

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கிறுக்கல்
















கண்ணனே கண்ணனே

கண்ணனே கண்ணனே

குழலூதும் கண்ணனே

நீ இல்லம் வாராயோ

எம் உள்ளம் பாராயோ

உனை அள்ளித் தாராயோ


உன்னை எண்ணி உன்னை எண்ணி

வாடும் உள்ளம் தூங்காது

இறைவா என் இறைவா

உளமறிவீரோ உடன் வருவீரோ


காணும்யாவும் நீயாய் தோன்றும்

பித்தம் நித்தம் உருவாச்சு

முகிலா கார் முகிலா

முன் வருவாயோ

முகம் தருவாயோ


கண் காண கண் காண

வாடா என்பேன்

கண் காண வாடா என்பேன்

கண் காண கண்ணா வந்தால்

கண்ணாரக் கண்டே மகிழ்வேனே


எங்கேநான் வாடும் போதும்

அங்கேநீ வாடா போதும்

தன்னாலே மாறும் வாட்டமே


தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்

பிரகலதன் பகர்ந்தனனே

ஊன்பழி தீர்த்தெனை உன்னடி சேர்த்திடு

பிரபஞ்சத்தை ஆள்பவனே


கண்ணனே கண்ணனே

கண்ணனே கண்ணனே

குழலூதும் கண்ணனே

நீ இல்லம் வாராயோ

எம் உள்ளம் பாராயோ

உனை அள்ளித் தாராயோ…

2 comments:

சிட்டுக்குருவி said...

அருமையான பாடல் அண்ணா

:))

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி தங்காய்...

Post a Comment