கண்ணனே கண்ணனே
கண்ணனே கண்ணனே
குழலூதும் கண்ணனே
நீ இல்லம் வாராயோ
எம் உள்ளம் பாராயோ
உனை அள்ளித் தாராயோ
உன்னை எண்ணி உன்னை எண்ணி
வாடும் உள்ளம் தூங்காது
இறைவா என் இறைவா
உளமறிவீரோ உடன் வருவீரோ
காணும்யாவும் நீயாய் தோன்றும்
பித்தம் நித்தம் உருவாச்சு
முகிலா கார் முகிலா
முன் வருவாயோ
முகம் தருவாயோ
கண் காண கண் காண
வாடா என்பேன்
கண் காண வாடா என்பேன்
கண் காண கண்ணா வந்தால்
கண்ணாரக் கண்டே மகிழ்வேனே
எங்கேநான் வாடும் போதும்
அங்கேநீ வாடா போதும்
தன்னாலே மாறும் வாட்டமே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
பிரகலதன் பகர்ந்தனனே
ஊன்பழி தீர்த்தெனை உன்னடி சேர்த்திடு
பிரபஞ்சத்தை ஆள்பவனே
கண்ணனே கண்ணனே
கண்ணனே கண்ணனே
குழலூதும் கண்ணனே
நீ இல்லம் வாராயோ
எம் உள்ளம் பாராயோ
உனை அள்ளித் தாராயோ…
2 comments:
அருமையான பாடல் அண்ணா
:))
நன்றி தங்காய்...
Post a Comment