Friday, September 3, 2010

பெண்ணடிமை - வெண்பா




















உடலில் சுவாசம் இருக்கும் வரைக்கும்

உடன்வரா சொந்தம்; உருகித் துடிக்க

உடலின் சுவாசமாய் வாழ்ந்த துணையை

உடன்கட்டை ஏற்றியே உள்ளுள் ரசித்தோர்

உடன்கட்டை ஏறும் கொடுஞ்செயல் நிற்க

உடனொரு வேலியைப் போடிட எண்ணி

மறுமணப் பேச்சு மரபிற்கு கேடு

திருமணம் என்பது ஓரிணைக் கூடு

இணையில் பிரிவா தனிமையில் வாடு

துணையின்றி வாழ துறவினை நாடு

எழுதிய கைகள் அடக்கிட பெண்ணை

எழுதுமோ ஏதும் அடுத்து.


No comments:

Post a Comment