Friday, February 11, 2011

கிறுக்கல் - 55

அன்பினைத் தேடி தேடி

ஆசையாய் வந்த காதல்

இதயத்தை குத்திக் கொல்லும்

ஈட்டியாய் அமையும் போது

உறவுகள் பொய்யாய் தோன்றும்

ஊழினை நம்பத் தோன்றும்

எஞ்சிய நாளில் எல்லாம்

ஏங்கியே உயிரும் அவளுடன்

ஐக்கியம் ஆக வேண்டி

ஒருதலை ராகம் பாட

ஓசையின்றி மனதில் வந்தாள்

ஔடதமாய் மீண்டும் அவளே...

2 comments:

மூர்த்தி said...

nice;-)

பிரசாத் said...

நன்றி மூர்த்தி அவர்களே...

Post a Comment