Tuesday, April 19, 2011

கிறுக்கல்

பின்னொரு நாளில்
அதிசயமாய் அதிகாலை எழும்பி
அவசரமாய் பல் துளக்கி
பலமுறை கண்ணாடியில் முகம் பார்த்து
என்றுமே இல்லாமல்
வெளியில் செல்வதைச் சொல்லிச் செல்லலாம்
என்னிடம் என் மகன்...
புரிந்தும் புரியாதவனாய்
சிரித்தபடி வழியனுப்பலாம் நானும்...
எனது இளமையை நினைத்து...!

No comments:

Post a Comment