பின்னொரு நாளில்
அதிசயமாய் அதிகாலை எழும்பி
அவசரமாய் பல் துளக்கி
பலமுறை கண்ணாடியில் முகம் பார்த்து
என்றுமே இல்லாமல்
வெளியில் செல்வதைச் சொல்லிச் செல்லலாம்
என்னிடம் என் மகன்...
புரிந்தும் புரியாதவனாய்
சிரித்தபடி வழியனுப்பலாம் நானும்...
எனது இளமையை நினைத்து...!
No comments:
Post a Comment