Monday, April 25, 2011

பாலாஜி பாமாலை

அன்பைச் செலுத்தி அபயம் புகுந்திட

நண்பனாய்க் காப்பான் ஹரி.

ஹரியை நினைக்க எதிர்வரும் துன்பம்

பரியாய் பறக்கும் அறி.

அறியா(து) அவன்பெயர் சொன்னாலும் தேடிகுறை

தீர்த்துநிற்பான் எங்கள் ஹரி.

ஹரியெனும் நாமம் நினைத்திட தீரும்

பிறவிப் பெருநோய் பசி.

பசிக்கும் வயிறுக்(கு) உணவாய் அமையும்

இனித்திடும் வேங்கடவன் அன்பு.



(இது சும்மா ஒரு முயற்சி தான்...

நெஞ்செல்லாம் நிற்கும் திருமால் புகழ்பாட
இப்பிறவி போதா(து) எனக்கு.)

No comments:

Post a Comment