நினைவுகளில் நான் உனைப் பார்த்தேன்
உன் நினைவாய் உனது மடல் பார்த்தே
என்னுயிரில் உனது மணம் சேர்த்தேன்
மடலும் உடலும் நலிந்ததடா - என்
மனமோ உனையேத் தேடுதடா
எழுத்தில் சொன்னது கொஞ்சமடா
ஏங்கித் தவிக்குது நெஞ்சமடா
கவிதை என்னும் கவன்வில்லால் - என்
மனதை அன்பால் உடைத்தாயே
மறந்தாயோ நீ அப்பொழுதை - நான்
மறைந்திடும்முன் நீ வருவாயே...
(கரு: ஷைலஜா அக்காவின் கவிதை ஒன்று)
No comments:
Post a Comment