ஒவ்வொருவரிடம்
ஒவ்வொரு முகத்திரையை
முகமாக காட்டிக் கொண்டிருக்கிறது
நிஜமுகத்தையே முகம் மறந்தாலும்...
எப்பொழுதும்
எல்லோருக்கும்
ஏதாவதொரு முகத்திரை
தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது...
முகத்திரைகள் பலதையும்
ஒருவருக்கு ஒன்றாய் காட்டும் போது
முகத்தினும் மேலாக முகத்திரைகள்
ரசிக்கவே வைக்கிறது எல்லோரையும்...
இரு வேறு நபர்களுக்கு
இரண்டு முகத்திரையை ஒன்றாக்கி
உலவும் சில பொழுதுகளில் மட்டும்
முகத்திரையொன்று கிழிந்து விகாரமாகலாம்...
விகாரத்தை அழகாக்கி
புதிய முகத்திரையை உருவாக்கத் தெரிந்தவன்
முகத்திரையை வெற்றி காண்கிறான் - மற்றவனை
முகத்திரை வெற்றி காண்கிறது.
No comments:
Post a Comment