Wednesday, June 13, 2012

உண்மை சாட்சி


நன்கு பழகியவர்கள் தான்…
இருந்துமென்ன?
சொல் சொல் என நச்சரித்தார்கள்…
சொல்ல விரும்பாததை.!

ஒருவனுக்குத்தானே உண்மை தெரியும்…
அந்த ஒருவனும் வந்து சொல்லவா போகிறான்
துணிந்து சொன்னேன் பொய்யை உண்மையாக
தற்காலிக தீர்வுக்காய்.!

யார் என்ன சொன்னால் என்ன?
உண்மை உன் மனதிற்குத் தெரியும்…
அனைத்தையும் கேட்டு முடித்தபின்
ஆறுதலாய் சொல்லி நின்றார் ஒருவர்.!

உண்மையான உண்மை வெளிப்படும் அன்று
உண்மையானவர்கள் வெளியேறுவர் உன்னை விட்டு.!
பொய் சொல்லும் போது இம்சிக்காத மனம்
பொய் உண்மையான பின் இம்சிக்கத் தொடங்கியது…

எதைஎதையோ பேசி நின்றேன்…
எதைஎதையோ நினைக்க விரும்பினேன்…
ஏப்பம் விட்டு எக்காளமிட்டுச் சிரித்தது
உள்ளத்தின் சாட்சி உண்மையின் சாட்சியாய்..!

No comments:

Post a Comment