Thursday, June 14, 2012

ஈடில்லா தாங்கி


நொடிப் பொழுதில்
சிரிக்க வைக்கும்
நட்புகள் பல...

உளமாற 
நலம் விழையும்
உறவுகள் பல

எத்தனை தான்
இருந்தும் என்ன?

இனம் புரியாத 
பாரமொன்று
மனதினை அழுத்தும் போதும்

இறக்கி வைக்க
கண்கள்
கண்ணீரை உதிர்க்கும் போதும்

ஏது இன்னொன்று
தன்னுள் வாங்கிக் கொண்டு
தைரியத்தை ஊட்டும்
இதமான தாய் மடி போல.!

No comments:

Post a Comment