ஆதாரம்ன உடனே நம்ம நினைவுக்கு வர்ரது ரெண்டு விஷயம். ஒன்னு குற்றத்தை நிரூபிக்கத் தேவையான சாட்சி இன்னொன்னு தாங்கு கோல்/அடிப்படை அதாவது ஒரு கொடி வளர்வதற்கு, கொம்பானது ஆதாரமாக/உதவியாக இருப்பது. இன்னைக்கு நாம பேசப் போற ஆதாரம் முதல் வகை. அதாவது சாட்சியைப் பத்தி.
ஆதாரத்துல என்னப்பா இருக்குன்றீங்களா… இருக்கே… நம்பிக்கையை மூட நம்பிக்கையாக்குறதும், மூட நம்பிக்கையை நம்பிக்கையாக்குறதும் இந்த ஆதாரம் தானுங்களே… உதாரணத்துக்கு, கடவுள் இருக்குறார் என்பது ஒரு சாரார் நம்பிக்கை. அது இல்லை, கடவுள் என்பது மூட நம்பிக்கைனு சொல்றவங்க தரப்பு வாதம் என்னானு ஆராய்ஞ்சு பார்த்தா, கடவுள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால கடவுள் என்பது மூட நம்பிக்கைம்பாங்க…
இப்படித்தான், நாம பாட்டி வைத்தியம், கை வைத்தியம்னு சொன்னதெல்லாம் சுத்த பேத்தல் மூட நம்பிக்கைனு சொல்லிட்டு அதே வைத்தியத்தை அடுத்தவன் விஞ்ஞானம்ன்ற பேர்ல பார்முலாவா மாத்தி, மாத்திரையாக் கொடுத்ததும் அதை விஞ்ஞானம்னு கொண்டாடுறோம். இதுக்காக எல்லாம் ஒரு விஷயத்தை யாராச்சும் சொன்னா ஆதாரம் இல்லாம கேட்டுக்க முடியுமா… முடியாது இல்லைங்களா…
எல்லா விஷயத்தையும் ஆராய்ஞ்சு பார்த்து அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரம்/சாட்சி இருந்தாதானே நாம ஆறறிவு படைச்ச மனுஷன்னு ஒத்துக்க முடியும். இன்னைக்கு நம்ம வாழ்க்கையில, நிச்சயமாய் கெட்டவன்னு பலரைத் தெரியும். ஆனால், அவனை ஒன்னுமே செய்ய முடியாது. காரணம் கேட்டாக்க, அவன் கெட்டவன்னு நிரூபிக்க போதிய அரசாங்கத்துக்கிட்ட ஆதாரம் இல்லைம்போம்…தப்பு பண்ணா தண்டனைன்றது போய், ஆதாரம் இருந்தா தான் தண்டனைன்னா நம்மாள வேற என்ன செய்ய முடியும்.
அதுக்காக, ஒருத்தன், இன்னொருத்தனை தப்பானவன்னு சொன்னா உடனே தண்டிச்சுடலாமான்னா அதுவும் முடியாதே. ஒருத்தன் இன்னொருத்தன் மேல இருக்குற பொறாமையால பொய்யா புகார் செய்தா, அப்ப தேவையில்லாம ஒருத்தன் தண்டிக்கப்படாம காப்பாத்தறது இந்த ஆதாரம் தானுங்களே. அதுவும் இன்னைக்கு இருக்குற சூழ்நிலையில சொல்லவா வேணும். அறிவியல் விஞ்ஞானம்னு இவ்வளவு வளர்ர்சியடைந்த பின்னாலயும், ஒருத்தன் செய்யாததை செஞ்சான்னும், செஞ்சதை செய்யவே இல்லைன்னும், பேசாததை பேசுனான்னும், பேசியதை பேசலைன்னும், வாய் புளிச்சுச்சோ மாங்காய் புளிச்சுச்சோனு வாய்க்கு வந்ததை பேசிட்டு போறவனும், இணையத்துல குப்பையா எழுதி வைக்கறவனும் இருக்கத்தானே செய்யுறாங்க…
இணையத்துல அங்கங்க இருக்குற இந்த மாதிரி தகவல்களை எல்லாம் பொய்யுனும், மெய்யுனும் ஒருத்தரை ஒருத்தர் தங்கள் தரப்பை நிரூபிக்க, அடுத்த தரப்பை போலியாக்க ஆதாரம் கொடு, ஆதாரம் கொடுன்னு மாத்தி மாத்தி கேட்டுக்கிடுவாங்க பாருங்க… இன்னைக்கு இருக்குறதுலயே சூப்பரான பொழுதுபோக்கு எதுடான்னா, இணையத்துல இந்த மாதிரி விவாதங்களை வேடிக்கை பார்க்குறதுதாங்க… மனிதனோட சராசரி இயல்புகளை எல்லாம் இங்கன இருந்து கண்டுக்கிடலாம். பொழுதுபோக்குன்னு சொன்ன உடனேயே எனக்கு இந்த ஆதாரத்தை வைச்சு விளையாடின விளையாட்டு தாங்க நினைப்புக்கு வர்ரது…
ஒருத்தனோட கண்ணை இன்னொருத்தன் பொத்திக்கிட மத்தவங்க எல்லாம் ஓடிப் போய் அங்க அங்க முட்டை சைஸுல மணலைக் குவிச்சு வைச்சுட்டு அதோட இல்லாம கையில கிடைக்குற கூடை, பேப்பர், ஓலைன்னு எதை எதையோ போட்டு மறைச்சும் வச்சுட்டு வந்துடுவோம். கண்ணை மூடிகிட்டிருக்குற பையன் ஒன்னுலர்ந்து நூறு வரைக்கும் எண்ணிட்டு, கூழை முட்டையை விட்டுட்டு நல்ல முட்டையைக் கண்டுபிடிம்போம். மத்தவங்க மறைச்சு வச்ச எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டான்னா அவன் ஜெயிச்சதாயும், பாதிக் கண்டுபுடிச்சு மீதிக் கண்டுபுடிக்கலைன்னா, மணலைக் குவிச்சு வச்சவங்களை இன்னும் எத்தனை முட்டை இருக்குனு கேட்டு மீண்டும் கண்டுபுடிக்கச் சொல்லுவோம். அப்படியும் கண்டுபுடிக்க முடியலைன்னா முட்டையா மணலைக் குவிச்சு வைச்சவனே அவன் சொன்ன அளவு முட்டைகளைக் கொண்டு போய் காட்டணும். அப்படி அவன் மறைச்சு வச்ச முட்டைகளை அவன் மறந்துட்டான்னாவோ, இல்லை அவன் சொன்ன எண்ணிக்கையில குறைஞ்சுடுச்சுன்னாவோ முட்டையை மறைச்சு வச்சவன் தோத்தவனாய்டுவான்…
ஆதாரம்ன்றதை விளையாட்டுல கூட வைச்சு, மனுஷன்னா எதையும் ஆராய்ஞ்சு அனுபவிச்சுத்தான் உண்மையத் தெரிஞ்சுக்கணும்னு சொல்லிக் கொடுத்தவக தான் நம்ம பெரியவங்க… இதுக்காக எல்லாத்துக்கும் ஆதாரம் வேணுமானும் கேட்க கூடாது. தீயைத் தொட்டா சுடும்னு மத்தவங்க சொன்னா கேட்டு நடந்துக்கிடணும். அதை விட்டுபுட்டு நான் தொட்டு பார்த்து தான் உணருவேன்னா வலியை அனுபவிக்கத் தானே வேணும்… என்ன நான் சொல்றது…
ஆதாரத்துல என்னப்பா இருக்குன்றீங்களா… இருக்கே… நம்பிக்கையை மூட நம்பிக்கையாக்குறதும், மூட நம்பிக்கையை நம்பிக்கையாக்குறதும் இந்த ஆதாரம் தானுங்களே… உதாரணத்துக்கு, கடவுள் இருக்குறார் என்பது ஒரு சாரார் நம்பிக்கை. அது இல்லை, கடவுள் என்பது மூட நம்பிக்கைனு சொல்றவங்க தரப்பு வாதம் என்னானு ஆராய்ஞ்சு பார்த்தா, கடவுள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால கடவுள் என்பது மூட நம்பிக்கைம்பாங்க…
இப்படித்தான், நாம பாட்டி வைத்தியம், கை வைத்தியம்னு சொன்னதெல்லாம் சுத்த பேத்தல் மூட நம்பிக்கைனு சொல்லிட்டு அதே வைத்தியத்தை அடுத்தவன் விஞ்ஞானம்ன்ற பேர்ல பார்முலாவா மாத்தி, மாத்திரையாக் கொடுத்ததும் அதை விஞ்ஞானம்னு கொண்டாடுறோம். இதுக்காக எல்லாம் ஒரு விஷயத்தை யாராச்சும் சொன்னா ஆதாரம் இல்லாம கேட்டுக்க முடியுமா… முடியாது இல்லைங்களா…
எல்லா விஷயத்தையும் ஆராய்ஞ்சு பார்த்து அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரம்/சாட்சி இருந்தாதானே நாம ஆறறிவு படைச்ச மனுஷன்னு ஒத்துக்க முடியும். இன்னைக்கு நம்ம வாழ்க்கையில, நிச்சயமாய் கெட்டவன்னு பலரைத் தெரியும். ஆனால், அவனை ஒன்னுமே செய்ய முடியாது. காரணம் கேட்டாக்க, அவன் கெட்டவன்னு நிரூபிக்க போதிய அரசாங்கத்துக்கிட்ட ஆதாரம் இல்லைம்போம்…தப்பு பண்ணா தண்டனைன்றது போய், ஆதாரம் இருந்தா தான் தண்டனைன்னா நம்மாள வேற என்ன செய்ய முடியும்.
அதுக்காக, ஒருத்தன், இன்னொருத்தனை தப்பானவன்னு சொன்னா உடனே தண்டிச்சுடலாமான்னா அதுவும் முடியாதே. ஒருத்தன் இன்னொருத்தன் மேல இருக்குற பொறாமையால பொய்யா புகார் செய்தா, அப்ப தேவையில்லாம ஒருத்தன் தண்டிக்கப்படாம காப்பாத்தறது இந்த ஆதாரம் தானுங்களே. அதுவும் இன்னைக்கு இருக்குற சூழ்நிலையில சொல்லவா வேணும். அறிவியல் விஞ்ஞானம்னு இவ்வளவு வளர்ர்சியடைந்த பின்னாலயும், ஒருத்தன் செய்யாததை செஞ்சான்னும், செஞ்சதை செய்யவே இல்லைன்னும், பேசாததை பேசுனான்னும், பேசியதை பேசலைன்னும், வாய் புளிச்சுச்சோ மாங்காய் புளிச்சுச்சோனு வாய்க்கு வந்ததை பேசிட்டு போறவனும், இணையத்துல குப்பையா எழுதி வைக்கறவனும் இருக்கத்தானே செய்யுறாங்க…
இணையத்துல அங்கங்க இருக்குற இந்த மாதிரி தகவல்களை எல்லாம் பொய்யுனும், மெய்யுனும் ஒருத்தரை ஒருத்தர் தங்கள் தரப்பை நிரூபிக்க, அடுத்த தரப்பை போலியாக்க ஆதாரம் கொடு, ஆதாரம் கொடுன்னு மாத்தி மாத்தி கேட்டுக்கிடுவாங்க பாருங்க… இன்னைக்கு இருக்குறதுலயே சூப்பரான பொழுதுபோக்கு எதுடான்னா, இணையத்துல இந்த மாதிரி விவாதங்களை வேடிக்கை பார்க்குறதுதாங்க… மனிதனோட சராசரி இயல்புகளை எல்லாம் இங்கன இருந்து கண்டுக்கிடலாம். பொழுதுபோக்குன்னு சொன்ன உடனேயே எனக்கு இந்த ஆதாரத்தை வைச்சு விளையாடின விளையாட்டு தாங்க நினைப்புக்கு வர்ரது…
ஒருத்தனோட கண்ணை இன்னொருத்தன் பொத்திக்கிட மத்தவங்க எல்லாம் ஓடிப் போய் அங்க அங்க முட்டை சைஸுல மணலைக் குவிச்சு வைச்சுட்டு அதோட இல்லாம கையில கிடைக்குற கூடை, பேப்பர், ஓலைன்னு எதை எதையோ போட்டு மறைச்சும் வச்சுட்டு வந்துடுவோம். கண்ணை மூடிகிட்டிருக்குற பையன் ஒன்னுலர்ந்து நூறு வரைக்கும் எண்ணிட்டு, கூழை முட்டையை விட்டுட்டு நல்ல முட்டையைக் கண்டுபிடிம்போம். மத்தவங்க மறைச்சு வச்ச எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டான்னா அவன் ஜெயிச்சதாயும், பாதிக் கண்டுபுடிச்சு மீதிக் கண்டுபுடிக்கலைன்னா, மணலைக் குவிச்சு வச்சவங்களை இன்னும் எத்தனை முட்டை இருக்குனு கேட்டு மீண்டும் கண்டுபுடிக்கச் சொல்லுவோம். அப்படியும் கண்டுபுடிக்க முடியலைன்னா முட்டையா மணலைக் குவிச்சு வைச்சவனே அவன் சொன்ன அளவு முட்டைகளைக் கொண்டு போய் காட்டணும். அப்படி அவன் மறைச்சு வச்ச முட்டைகளை அவன் மறந்துட்டான்னாவோ, இல்லை அவன் சொன்ன எண்ணிக்கையில குறைஞ்சுடுச்சுன்னாவோ முட்டையை மறைச்சு வச்சவன் தோத்தவனாய்டுவான்…
ஆதாரம்ன்றதை விளையாட்டுல கூட வைச்சு, மனுஷன்னா எதையும் ஆராய்ஞ்சு அனுபவிச்சுத்தான் உண்மையத் தெரிஞ்சுக்கணும்னு சொல்லிக் கொடுத்தவக தான் நம்ம பெரியவங்க… இதுக்காக எல்லாத்துக்கும் ஆதாரம் வேணுமானும் கேட்க கூடாது. தீயைத் தொட்டா சுடும்னு மத்தவங்க சொன்னா கேட்டு நடந்துக்கிடணும். அதை விட்டுபுட்டு நான் தொட்டு பார்த்து தான் உணருவேன்னா வலியை அனுபவிக்கத் தானே வேணும்… என்ன நான் சொல்றது…
No comments:
Post a Comment