Saturday, July 14, 2012

காதல் அந்தாதி


நட்பாய் நுழைந்தவள் நெஞ்சத்தில் தங்கிட

கட்டினேன் காதல்;கோட் டை.


கோட்டையைக் கட்டிட வேட்டையாடி னாள்;எந்தன்

தூக்கத்தை உள்ளே நுழைந்து...



நுழைந்தவள் தைத்தாள் நெருஞ்சியின் முள்ளாய்

கலைந்ததென் காதல் கனவு.


கனவது பொய்க்க கடவுளை வேண்டி
நெருங்கினேன் நட்பினைத்;தே டி.


தேடி கிடைத்ததும் நட்பினுள் காதலை

தேடித் தவிக்குது;நெஞ் சம்.


நெஞ்சம் தவிக்க நினைவுகள் கொதிக்க
தகிக்குது அனலாய் உடல்.


உடலைத் தொடர்ந்தே உயிரில் கலக்க
உருகித் தவிக்குது;கா தல்.


காதல் உணர்த்திட தேவை பிரிவென

சென்றேன் பிரிந்து தொலைவு.



தொலைவில் அவள்முகம் பார்த்ததும் வானில்
சிறகை விரிக்குது நெஞ்சு.


நெஞ்சத்துக் காதல் நயமாய் உணர்த்த
நெருங்கித் தொடர்ந்திட்டேன் நட்பு.

No comments:

Post a Comment