நட்பாய் நுழைந்தவள் நெஞ்சத்தில் தங்கிட
கட்டினேன் காதல்;கோட் டை.
கோட்டையைக் கட்டிட வேட்டையாடி னாள்;எந்தன்
தூக்கத்தை உள்ளே நுழைந்து...
நுழைந்தவள் தைத்தாள் நெருஞ்சியின் முள்ளாய்
கலைந்ததென் காதல் கனவு.
கனவது பொய்க்க கடவுளை வேண்டி
நெருங்கினேன் நட்பினைத்;தே டி.
தேடி கிடைத்ததும் நட்பினுள் காதலை
தேடித் தவிக்குது;நெஞ் சம்.
நெஞ்சம் தவிக்க நினைவுகள் கொதிக்க
தகிக்குது அனலாய் உடல்.
உடலைத் தொடர்ந்தே உயிரில் கலக்க
உருகித் தவிக்குது;கா தல்.
காதல் உணர்த்திட தேவை பிரிவென
சென்றேன் பிரிந்து தொலைவு.
தொலைவில் அவள்முகம் பார்த்ததும் வானில்
சிறகை விரிக்குது நெஞ்சு.
நெஞ்சத்துக் காதல் நயமாய் உணர்த்த
நெருங்கித் தொடர்ந்திட்டேன் நட்பு.
No comments:
Post a Comment