வர வர இந்த ஒலகத்துல ஒன்னுமே புரிய
மாட்டேங்குதுங்க... அப்படி என்ன தான் புரியலைன்னு கேட்கறீங்களா... சொல்றேன் கேளுங்க...
வாழைப்பழத்துல ஊசி இறக்குறாப்புல
சில விஷயங்களை நம்ம கூட இருக்குறவங்க செய்வாங்கங்க... அது புகழ்ச்சியா,
இகழ்ச்சியானு நமக்கு சட்டுனு புரியவே புரியாதுங்க... அப்படி என்ன தான்
பேசுறாங்கன்னு கேட்கறீங்களா... கேட்டுட்டு நீங்களாச்சும் சொல்லுங்க இது
புகழ்ச்சியா இகழ்ச்சியானு...
ஒருநாள் எதேச்சையா ஒரு பாட்டு
பாடிட்டு இருந்தேங்க. பக்கத்துல நான் பாடறதைக் கேட்ட ஒரு நண்பன், மச்சி, எப்படிடா
உன்னால மட்டும் இப்படி முடியுது... இத்தனை நாள் உன்கூட இருந்திருக்கேன். உனக்கு
பாடத் தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லலை... எத்தனை கச்சேரிடா மச்சி செஞ்சிருக்கனு
கேட்டான்...
டேய், நான் ஏதோ சும்மா பொழுது
போகாம பாடுவேன். அவ்வளவு தான். ஓவரா பில்டப் செய்யாதடா. நானெல்லாம் கச்சேரி பண்ணா
கல்லால தான் அடிப்பாங்க. வாடா பேசாமன்னு சொன்னேங்க...
விட்டானா எமகாதகப் பய, டேய்
என்னாடா சொல்லுற நீ... கண்ட கண்ட கழுதைக எல்லாம் பாடுறேன்ற பேர்ல கத்திட்டு
இருக்கு... நீ பாடறதுக்கு என்னடான்னு என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான்
பாருங்க...
நான் அப்படியே ஆடிப் போயிட்டேன்.
கழுதைக கத்துற கூட்டத்துல நீயும் போய் கத்தேன்டானு சொல்ல வர்ரானா... இல்லை
உண்மையாவே என்னைப் புகழ்றானா... ஒன்னுமே புரியலைங்க...
இதுக்கு பதிலை எனக்காக மட்டும்
கேட்கலைங்க... உங்களுக்கும் சேர்த்து தான் கேட்கறேன். நீங்க ஒரு நாலு வரி கவிதை
மாதிரி எழுதுனாலோ, இல்லை கதை, கட்டுரைன்னு எழுதிட்டாலோ, எதுவுமே இல்லை சும்மா ஒரு
நாலு வார்த்தை நறுக்குனு பேசிட்டாலோ உங்களைச் சுத்தியும் இப்படி நாலு பேரு
கேட்டிருப்பாங்க இல்லை... அதனால தான் கேட்குறேன்... இவங்க நம்மள புகழ்றாங்களா,
இகழ்றாங்களா...
சொல்லுங்க... ஒன்னுமே தெரியாத
பசங்க எல்லாம் இணையத்துல எவ்ளோ பில்டப்பு கொடுக்குதுங்க... நீங்க பதில் சொல்லாம
போனா எப்படி... ஹலோ சார், எங்க ஓடுறீங்க... பதிலைச் சொல்லிட்டுப் போங்க...
2 comments:
ஹா ஹா ஹா !
என்ன பதில சொல்ல நண்பா அதான் நீங்களே சொல்லிட்டீங்களே! புகழ்வதைப்போல் இகழ்வதும், இகழ்வதைப்போல் புகழ்வதும், நம் சுற்றத்தாருக்கு கிடைக்கும் சுகம். முகப்பவனையை பார்த்து முடிவு செய் நண்பா.
கருத்துக்கு நன்றி நண்பா...
Post a Comment