சிறகில்லாமல்
வானில் பறக்கிறேன்
உன் ஒற்றைப் பார்வையது
ஓரமாய் விழும் போதெல்லாம்...
கருவிகள் ஏதுமின்றி
இசையமைக்கிறேன்...
கூவும் குயிலாய்
நீ பேசும் போதெல்லாம்...
பாதை தெரியாமல்
தடு(டம்) மாறுகிறேன்...
களுக்கென சிரித்தென் கண்ணை
களவாடும் போதெல்லாம்...
கைக்குவளை நீருந்தன்
தாகத்தைத் தீர்க்கையிலே
எந்நாவும் துடிக்குதடி.
தாகத்தால் தவிக்குதடி...
இப்படியே எத்தனை நாள்
உன்னை நீ காக்க வைப்பாய்...
பார்வையிலே பரிசளித்து
பறந்துவிட கரம் கொடுப்பாய்...
4 comments:
மிக ரசித்தேன் தொடர்ந்து கலக்குங்க ,
பாராட்டுகள்
நன்றிங்க...
மிகவும் அருமை பிரசாத்
வாழ்த்துகள்
நன்றி ஐயா...
Post a Comment