Thursday, July 21, 2011

காதலிக்கலாம் வா - 4

கண்ஜாடை காட்டிப்புட்ட
அழகாக - அது
என்னையுந்தான் ஆக்கிடுச்சு
புள்ளாக

சொன்னாயே ஒரு சொல்லை
பதமாக - அது
சொர்க்கந்தான் காட்டுதெனக்கு
இதமாக

ஊர்முழுக்க மேளம்கொட்டி
சொல்லிப்புட்டு - உன்னை
பரிசமிட்டு பாய்ஞ்சணைக்க
ஓடிவர்றேன்...

பரிசமதை போடுமுன்னே
பரிசாக - காதல்
கரிசனத்தால் முத்தம்தாயேன்
சிறுசாக...

2 comments:

இரா.ச.இமலாதித்தன் said...

என்னையுந்தான் ஆக்கிடுச்சு
//புள்ளாக//

புள் யென்றால் என்ன? full ஆ?:))

பிரசாத் வேணுகோபால் said...

புள் = பறவை..

Post a Comment