Sunday, July 17, 2011

சிக்னல் வியாபாரம்

மூன்று நிமிடத்திற்கு அரை நிமிடம்
மூச்சைக் கையில் பிடித்து
உயிரைப் பணயம் வைத்து
நின்றபடி உறுமும் வாகனங்களுக்கிடையே
ஓடியபடி கூவுகிறான்…
காற்றிற்காகத் திறந்த சன்னலின்
ஏழை நடுத்தர வர்க்கத்தின் முன்னும்…
குளிரூட்ட மூடிய சன்னலின்
உயர்தர வர்க்கத்தின் முன்னும்…
மனக்கதவு திறந்து
பணப்பை நிறையாதா என்று.!

2 comments:

Post a Comment