சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Sunday, July 17, 2011
சிக்னல் வியாபாரம்
மூன்று நிமிடத்திற்கு அரை நிமிடம் மூச்சைக் கையில் பிடித்து உயிரைப் பணயம் வைத்து நின்றபடி உறுமும் வாகனங்களுக்கிடையே ஓடியபடி கூவுகிறான்… காற்றிற்காகத் திறந்த சன்னலின் ஏழை நடுத்தர வர்க்கத்தின் முன்னும்… குளிரூட்ட மூடிய சன்னலின் உயர்தர வர்க்கத்தின் முன்னும்… மனக்கதவு திறந்து பணப்பை நிறையாதா என்று.!
2 comments:
நன்று.
நன்றி அக்கா...
Post a Comment