Friday, February 7, 2014

முகக்குறிப்பு

சிரித்தாள்..
பின் சிலிர்த்தாள்...
அதன் பின் அழுதாள்...

சிரித்தபடி அழுதும்
அழுதபடி சிரித்தும்
ஏமாற்றினாள்...

நொடிக்கொருமுறை மாறும்
முகக்குறிப்புகளுக்கு
விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தோம்...

பிள்ளையார்
பிள்ளையிடம்
விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கடந்த காலத்தின்
எச்சத்தை மிச்சமின்றி
அசை போடுகிறாள்.

வருங்கால வாழ்வு
மொத்தத்தையும்
முழுபடமாய் காண்கிறாள்.

குறிப்புகள் வார்த்தைகளாகும் நாளில்
அழிந்து போய் விடலாம்....
முகக்குறிப்புகளும் அதன் விளக்கங்களும்.!

No comments:

Post a Comment