Friday, February 7, 2014

மனித எந்திரமும்; எந்திர மனிதமும்

உறக்கம் கலையும் முன் வெளியேறி
உறங்கிய பின் அவள் உச்சி முகர்ந்து
படுக்கைக்குப் போகையில்
என் பத்தினி சொன்னாள்

சொல்ல ஆரம்பித்து விட்டாளாம் மகள்
அப்பா என

முடிவெடுத்தேன்
அலுவலகத்தை குறைத்து
அன்பு மகளுக்கு காட்ட வேண்டும்
அப்பா வெறும் வார்த்தையல்ல
நான் தானென்று.

விழித்தெழ வைத்த கடிகாரம்
விடாமல் அலறுகிறது
விடைதேடி...
அப்பாவா??? அலுவலகமா???

No comments:

Post a Comment