Monday, August 16, 2010

கிறுக்கல் - 45

மனமே மனமே பேசவிடு

குமுறுலைக் கொட்டித் தீர்த்துவிட

பேசா வார்த்தைகள் சேர்ந்து என்னுள்

பேதைமை இன்னும் வளர்த்திடுது

ஒருநாள் எதிர்த்து பேசியதால்

ஒவ்வா நட்பாய் நானானேன்

ஒருமுறை செய்த தவறாலே

ஒவ்வொரு முறையும் தவறானேன்

பேசிட என்னை அனுமதித்தால்

பேதைமை மறைய வாய்ப்புமுண்டு

மனமே மனமே பேசவிடு

குமுறுலைக் கொட்டித் தீர்த்துவிட…

2 comments:

கவிநா... said...

ஹ்ம்ம்.. ரொம்ப நல்லாருக்குங்க அண்ணா.... ஒரு பாடல் மாதிரி சந்தத்தோட போகுது....

பிரசாத் வேணுகோபால் said...

thank you daa...

Post a Comment