துடுப்பிழந்த படகைக் காக்கும் துடுப்பாய்
வழிதவறிய காட்டில் வழிகாட்டியாய்
வன்முறை வெறியர்களை வேட்டையாடும் காவலனாய்
பறவைகளோடு போட்டி போட்டு பறக்கும் மனிதப்பறவையாய்
பாம்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்
பாம்பை பிணைத்து கயிறாக்கும் மாயாவியாய்
நடக்கும் நிகழ்வனைத்திலும் நாயகனாகவே - நனவில்
நடக்குமா எனத் தெரியாத நான் கண்ட கனவுகளில்....
1 comment:
ம்ம்ம்.. கனவில் எல்லாமே சாத்தியம் தான் அண்ணா....
கவிதைக்கேற்ற படம், நல்ல பொருத்தம்... அருமை..
Post a Comment