Saturday, August 21, 2010

திருமண வாழ்த்துப்பா

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

விழியோடு இமைபோலவே பிரியாமல் துணையோடு

பல்லாண்டு நீவாழ்கவே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

குழந்தைபல பெற்று நல்குடும்பமாய் வாழும்

மணவாழ்வின் ஆரம்ப நன்னாளிது

இன்பதுன்பம் யாவும் பகிர்ந்துகொண்டு வாழும்

இல்லறத்தின் ஆரம்ப நன்னாளிது

சந்தேகம் மனதில் இல்லாமல் வாழ்ந்தால்

இல்வாழ்க்கை ஆனந்தமே

சந்தேகம் தோன்ற மனம்விட்டுப் பேச

பறந்தோடும் சந்தேகமே

இன்றுபோல் என்றும் இன்பமுடன் வாழ

இறையருளை நாளும் வேண்டுவேன் நானும்

பல்லாண்டு நீவாழ்கவே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே...


2 comments:

Anonymous said...

//ஆனந்தமேசந்தேகம் தோன்ற மனம்விட்டுப் பேசபறந்தோடும் சந்தேகமேஇன்றுபோல் என்றும் இன்பமுடன் வாழஇறையருளை நாளும் வேண்டுவேன் நானும்பல்லாண்டு நீவாழ்கவேகல்யாணம் காணும் நட்பென்னும் உறவேநல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே/...

நல்லாருக்கே!


ஷைலஜா

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அக்கா...

Post a Comment