கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே
நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே
கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே
நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே
விழியோடு இமைபோலவே பிரியாமல் துணையோடு
பல்லாண்டு நீவாழ்கவே
கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே
நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே
குழந்தைபல பெற்று நல்குடும்பமாய் வாழும்
மணவாழ்வின் ஆரம்ப நன்னாளிது
இன்பதுன்பம் யாவும் பகிர்ந்துகொண்டு வாழும்
இல்லறத்தின் ஆரம்ப நன்னாளிது
சந்தேகம் மனதில் இல்லாமல் வாழ்ந்தால்
இல்வாழ்க்கை ஆனந்தமே
சந்தேகம் தோன்ற மனம்விட்டுப் பேச
பறந்தோடும் சந்தேகமே
இன்றுபோல் என்றும் இன்பமுடன் வாழ
இறையருளை நாளும் வேண்டுவேன் நானும்
பல்லாண்டு நீவாழ்கவே
கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே
நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே...
2 comments:
//ஆனந்தமேசந்தேகம் தோன்ற மனம்விட்டுப் பேசபறந்தோடும் சந்தேகமேஇன்றுபோல் என்றும் இன்பமுடன் வாழஇறையருளை நாளும் வேண்டுவேன் நானும்பல்லாண்டு நீவாழ்கவேகல்யாணம் காணும் நட்பென்னும் உறவேநல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே/...
நல்லாருக்கே!
ஷைலஜா
நன்றி அக்கா...
Post a Comment