Monday, September 27, 2010

எந்திரனுக்கான இராவணன் பாடல் வரிகள்

இந்த சினிமாவில் எப்படித்தான் நீ நுழைஞ்ச

உன்னைசுத்தியொரு கூட்டத்தையே நீ வளர்த்த

அட சினிமாத் துறை அது பெருசுதான்

அதில் நாயகன் பங்கோ சிறுசுதான்

அட சினிமாத் துறை அது பெருசுதான்

அதில் நாயகன் பங்கோ சிறுசுதான்

ஒரு சினிமா படமதை லாபத்திலே

தர நாயகன் உன்போல் எவனுமில்லை

விசிலோ பறக்குதே விசிலோ பறக்குதே

ஸ்டைலா திரையில் நீ வருகையில

ஓ… அடிபட்டு பார்க்கிறான்

மிதிபட்டும் பார்க்கிறான்

முதல் ஷோ உன்படம் தியேட்டரிலே

எத்தனை தியேட்டரில் படம் வந்தும்

எல்லாம் கூட்டத்தில் வழிகிறதே

எத்தனை பணமது செலவுசெஞ்சும்

படத்தினை பார்த்திட துடிக்கிறதே

நடிகனும் ரசிகனும் தூரம் தூரம்

சொல்ல நினைச்சேன் ஆகலை

மவுசு பந்தா எதுவும் இல்லா

எளிமையோ உனைவிட்டு போகலை

தவியா தவிச்சும்

படம் டிக்கெட் அது கிடைக்கலையே

தெருவில் போஸ்டர்

என்ன தள்ளி எள்ளி சிரிக்கிறதே

என்ட முதல்ஷோ ஆசை தீருமா

அட எந்திரன் டிக்கெட் ஒன்னு தேறுமா

என் கிறக்கத்தை தீக்க டிக்கட் கிடைச்சிருமா

இந்தியும் தமிழுமாய்

இந்த படத்தில இணைஞ்சுதே

எங்கடிக்கெட் கிடைக்கும்னு

என் தலை சுத்தி குழம்புதே


விசிலோ பறக்குதே விசிலோ பறக்குதே

ஸ்டைலா திரையில் நீ வருகையில

ஓ… அடிபட்டு பார்க்கிறான்

மிதிபட்டும் பார்க்கிறான்

முதல் ஷோ உன்படம் தியேட்டரிலே

எத்தனை தியேட்டரில் படம் வந்தும்

எல்லாம் கூட்டத்தில் வழிகிறதே

எத்தனை பணமது செலவுசெஞ்சும்

படத்தினை பார்த்திட துடிக்கிறதே

உன் படத்துக்கு இது ஒன்னும் புதுசில்ல

ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஹிட்டினுல

அதைச் சொல்லி எள்ளிடுவான் பேப்பரில

தோல்வியொன்னில்லாம வெற்றியில்லை

எட்டியிருக்கும் உன்னுயரம் பார்த்து

எட்ட வரும்புது தலைமுறை

தொட்டு விடாத உயரம் இருந்தும்

தொழிலில நீஇன்னும் மாறலை

ஆறும் விரும்பும் உனை அறுபதும் விரும்பிடுமே

பாரே புகழ்ந்தும் தலைக் கனமின்னும் வரவில்லையே

உன் படங்களும் ஒரு நாள் வீழலாம்

உன் புகழது அப்பொழுதும் வீழுமா

உன் இடம்மட்டும்

உன் ரசிகர் மனசுக்குள்ள

இந்தியும் தமிழுமாய்

இந்த படத்தில இணைஞ்சுதே

எங்கடிக்கெட் கிடைக்கும்னு

என் தலை சுத்தி குழம்புதே

விசிலோ பறக்குதே விசிலோ பறக்குதே

ஸ்டைலா திரையில் நீ வருகையில

ஓ… அடிபட்டு பார்க்கிறான்

மிதிபட்டும் பார்க்கிறான்

முதல் ஷோ உன்படம் தியேட்டரிலே

எத்தனை தியேட்டரில் படம் வந்தும்

எல்லாம் கூட்டத்தில் வழிகிறதே

எத்தனை பணமது செலவுசெஞ்சும்

படத்தினை பார்த்திட துடிக்கிறதே…


2 comments:

Post a Comment