ஓடி ஆடும் வேளையில்
தேடி வந்தாள் தோழியும்
சாவி தந்தால் ஓடிடும்
காவி நிறக் காருடன்..
பார்க்க பார்க்க பரவசம்
காரும் இல்லை என்வசம்
இருந்தும் சேர்ந்து ஆடினேன்
இன்பம் கொண்டு பாடினேன்...
என்னைத் தேடி அன்னையும்
வீதி எல்லாம் கூப்பிட
ஓடிச் சென்று நானுமே
காரைப் பற்றி பாடினேன்...
எந்தன் ஆசை கேட்டதும்
கொஞ்ச நேரம் யோசித்து
அன்னை தந்தாள் சில்லறை
திங்க ஏதும் வாங்கிட...
தந்த காசை நானுமே
சேர்த்து வைப்பேன் நாளுமே
நிறைய பணம் சேர்ந்ததும்
நானும் காரை வாங்குவேன்...
No comments:
Post a Comment