பாதை தெரியாமல் ஓடிய நான்
பறந்தேன்...
பறத்தலின் சுகம் அனுபவிக்கும் முன்னே
விழுந்தேன்...
விழுந்திட்ட வேகத்தில் அறுபட்ட மணிமாலையாய்
சிதறினேன்..
வரிசை மாறிய சிதறிய மணிகளாய்
கோர்க்கப்பட்டேன்...
கைகோர்த்த கணம் உணருமுன்னே ஓடுகிறேன்
பாதை தெரியாமல் - மீண்டும்.
No comments:
Post a Comment