Wednesday, June 15, 2011

இரு வெண்பாக்கள்

பெண்ணாசைக் கொண்டு மடிந்தானே ராவணன்
மண்ணாசைக் கொண்டு மடிந்தானே நல்துரியன்
சொன்னாலும் துர்குணத்தால் கேட்காமல் மந்தியைப்போல்
எந்நாளும் ஏங்கும் மனம்.

கற்போடு வாழ்ந்திருப்போர் கண்கொண்டு சொல்லுங்கால்
நில்லென்றால் நின்றிடவும் பெய்யென்றால் பெய்திடவும்
செய்திடுமாம் வான்மழையும்; ஈற்றாக வைத்திட்டார்
பெண்ணொருத்தி சொல்லிட என்று.

No comments:

Post a Comment