இருளுக்கும் வெளிச்சத்திற்கும்
இடைப்பட்ட பொழுதொன்றில்
யாருமற்று தனியே நின்றிருந்தேன்
என்னையே பார்த்தபடி...
சட்டென்று என்னை
அள்ளிச் சென்ற வாகனத்தில்
என்னை எனக்குள் திணித்தபடி சிலர்...
மெதுமெதுவாய் என்னை இழக்க
முனகியபடி துள்ளி எழுந்தது
என் உடம்பு...
எதுவுமேத் தெரியாமல்.!
No comments:
Post a Comment