Friday, March 23, 2012

மறுஜென்மம்

இருளுக்கும் வெளிச்சத்திற்கும்
இடைப்பட்ட பொழுதொன்றில்
யாருமற்று தனியே நின்றிருந்தேன்
என்னையே பார்த்தபடி...

சட்டென்று என்னை
அள்ளிச் சென்ற வாகனத்தில்
என்னை எனக்குள் திணித்தபடி சிலர்...

மெதுமெதுவாய் என்னை இழக்க
முனகியபடி துள்ளி எழுந்தது
என் உடம்பு...

எதுவுமேத் தெரியாமல்.!

No comments:

Post a Comment