Sunday, March 25, 2012

நட்புடன் குழும கரகாட்டக்காரன் - நகைச்சுவைக்காக மட்டும்

(நண்பர்களே, இதில் வரும் காட்சி அமைப்புகள் அனைத்தும் விளையாட்டிற்காக கற்பனையாய் உருவாக்கப்பட்டதே... எனது இவ்வெழுத்துகள் யாரையாவது காயமேற்படுத்தினால், அதற்கு முன்கூட்டிய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...)

காட்சி 1 : பாலாஜி மாம்ஸும் ஆகாஷும்

பாலாஜி மாம்ஸ்: டேய் ஆகாஷ்…

ஆகாஷ் : அண்ணே, இதோ.! வந்துட்டேன் அண்ணே… என்ன அண்ணேகூப்பிட்டீங்களாஅண்ணே…

பாலாஜி மாம்ஸ்: இந்தா ஒரு மடலு… போயி குரூப்புல இருந்து ரெண்டு பேரைபுடிச்சுட்டுவாஇன்னைக்கு நகர்வலம் போக…

ஆகாஷ் : டிரீட் வாங்கவா, டிரீட் கொடுக்கவா…

பாலாஜி மாம்ஸ் : எதுக்காச்சும் கூட்டிட்டு வாடா… போடா…

ஆகாஷ் : ரெண்டு பேரு…


காட்சி 2 : ஜோசப் அண்ணாவுடன் ஆகாஷ்

ஆகாஷ்: குழுமக்காரரே, எங்க அண்ணன் ரெண்டு பேரைக் கூப்பிட்டு வரச்சொன்னாரு…

ஜோசப் அண்ணா : உங்க அண்ணன் என்ன கலெக்டரா… மேட்டரைச் சொன்னாயாராச்சும்ரெண்டுஆளு வரப்போறாங்க…

ஆகாஷ் : சரி சரி, ரெண்டு ஆளுஎனக்கு வேணும்…

ஜோசப் அண்ணா : உனக்கு ரெண்டு ஆளு வேணுமா… (நோ ரெண்டு சிம்மு)

ஆகாஷ் : ரெண்டு ஆளு

ஜோசப் அண்ணா : ஆளு ரெண்டு

ஆகாஷ் : ரெண்டு ஆளு

ஜோசப் அண்ணா : ஆளு ரெண்டு

ஆகாஷ் : ரெண்டும் ஆளு...

ஜோசப் அண்ணா : உன் கூட தலைவலிய்யா… சரி மேட்டரைச் சொல்லு…

ஆகாஷ்: மேட்டரைச் சொல்கிறார்…

ஜோசப் அண்ணா: நீயே கூப்பிட்டக்க…

(ஜெஹபர் மற்றும் ஹாஜா அவர்களை நகர்வலத்துக்கு ஏற்பாடுசெஞ்சுக்கிட்டுஆகாஷ்திரும்புகிறார். அப்பொழுது இருவரிடமும் கொஞ்ச நேரம்நல விசாரிப்புகள் எல்லாம்முடிஞ்சு,சுற்றும் முற்றும் திருதிருன்னு பார்த்துட்டு,ஆகாஷ், ஜெஹபர் அண்ணாவைப் பார்த்து, “என்னமனுஷன்யா நீரு, வீட்லகைக்குழந்தையை வச்சுகிட்டு நகர்வலம்னு சொன்னதும்பல்லைஇளிச்சுகிட்டுவர்ரீரே… போய்யா”… என்று விரட்டாத குறையாய் பேசிவிரட்டிவிடுகிறார்.ஹாஜாவை மட்டும் அழைத்துக் கொண்டு தனியே பாலாஜிமாம்ஸிடம் திரும்புகிறார்.)


காட்சி 3 : பாலாஜி மாம்ஸுடன் ஆகாஷ்

ஆகாஷ் : இந்தாங்கண்ணே…என்று ஹாஜாவைக் கை காண்பிக்கிறார்…

பாலாஜி மாம்ஸ் : எதுக்கு இவரு ?

ஆகாஷ் : நகர்வலத்துக்கு…

பாலாஜி மாம்ஸ்: நான் உன் கிட்ட எத்தனை பேரைக் கூப்பிட்டு வரச்சொன்னேன்?

ஆகாஷ் : ரெண்டு…

பாலாஜி மாம்ஸ் : ஒருத்தரு இங்க இருக்காரு… இன்னொருத்தரு எங்கே் ?

ஆகாஷ் : அந்த இன்னொருத்தரு தான் அண்ணே இவரு…

பாலாஜி மாம்ஸ்: டேய், நான் உங்கிட்ட என்ன சொன்னேன்…

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னீங்க…

பாலாஜி மாம்ஸ் : என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

பாலாஜி மாம்ஸ் : எத்தனை பேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்…

ஆகாஷ் : ரெண்டு பேரு…

பாலாஜி மாம்ஸ் : ஒருத்தரு இங்க இருக்காரு… இன்னொருத்தரு எங்கே…

ஆகாஷ் : இன்னொருத்தரு தான் அண்ணே இது…

பாலாஜி மாம்ஸ்: ப்ச்… உட்காரு… டேய் நான் உங்கிட்ட என்ன சொன்னேன்..

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னீங்க…

பாலாஜி மாம்ஸ் : எத்தனை பேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்…

ஆகாஷ் : ரெண்டு பேரு…

பாலாஜி மாம்ஸ் : என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

பாலாஜி மாம்ஸ் : நகர்வலத்துக்கு எத்தனை பேரு

ஆகாஷ் : ரெண்டு பேரு

பாலாஜி மாம்ஸ் : ஒருத்தரு இங்க இருக்காரு… இன்னொருத்தரு எங்கே…

ஆகாஷ் : இன்னொருத்தரு தான் அண்ணே இது…

பாலாஜி மாம்ஸ் : டேய்……


காட்சி 4 : மோருசுப்ராவுடன் பாலாஜி மாம்ஸ்

மோருசுப்ரா: என்ன அண்ணே, இவன் கிட்ட போய் சண்டை போட்டுக்கிட்டு…இவரு நம்ம கட்சி…

பாலாஜி மாம்ஸ் : என்ன? நம்ம கட்சி… பொல்லாத நகர்வல கட்சி… அவன்என்ன செஞ்சிருக்கான்…

மோருசுப்ரா : என்ன செஞ்சிருக்கான் ?

பாலாஜி மாம்ஸ் : நீ கேளு.. (ஆகாஷைப் பார்த்து) டேய் உட்காருடா…

பாலாஜி மாம்ஸ் : (மோருவைப் பார்த்து) தம்பி, ஒரு நகர்வலம் போக ரெண்டுபேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்… ஒருத்தரு இங்க இருக்காரு…இன்னொருத்தரு எங்கேனு நீயே கேளு…

மோரு சுப்ரா : இதுக்குப் போயி அவன் கிட்ட சண்டை போட்டா எப்படிச்சொல்லுவான்…


காட்சி 5 : ஆகாஷுடன் மோருசுப்ரா

மோருசுப்ரா : (ஆகாஷைப் பார்த்து) கண்ணே, அண்ணன் உன்கிட்ட என்னசொன்னாரு…

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னாரு…

மோருசுப்ரா: என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

மோருசுப்ரா: எத்தனை பேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்…

ஆகாஷ் : ரெண்டு பேரு…

மோருசுப்ரா : ரெண்டு பேரைக் கூட்டியாரச் சொன்னாரில்ல… நீ கூப்பிட்டுவந்தவங்கள்லஒருத்தரு இங்க இருக்காரு, இன்னொருத்தரு எங்க இருக்காரு…

ஆகாஷ் : அட, அந்த இன்னொருத்தரு தாங்க இவரு…

பாலாஜி மாம்ஸ் : அடேய்…அடேய்… (துள்ளி ஆகாஷை அடிக்க முற்படுகிறார்)

மோரு சுப்ரா : ( பாலாஜி மாம்ஸை சமாதானமாக்கும் விதத்தில்) அண்ணே,அண்ணே, அண்ணே… சொன்னா கேளுங்க…


காட்சி 6 : ஜாரியா அக்கா, மோருசுப்ரா, ஆகாஷ் மற்றும் பாலாஜி மாம்ஸ்

ஜாரியா அக்கா : இந்தா, இந்தா , இந்தா, இந்தா.! எங்க இன்ன சண்டை… எங்கஇன்ன சண்டை…

மோருசுப்ரா : ஒன்னுமில்ல அக்கா… அண்ணன், ஆகாஷை நகர்வலம் போகரெண்டு பேரைக் கூட்டியாரச் சொல்லி இருக்காரு…ஒருத்தரைக் கூட்டியாந்துகைல கொடுத்துட்டாரு, இன்னொருத்தரு எங்கேனு கேட்டா அதுவும்இவருதான்றாரு… நீயே கேளுக்கா…

ஜாரியா அக்கா : (ஆகாஷைப் பார்த்து) இந்தா, உன்கிட்ட என்ன சொல்லிஅனுப்புனாரு…

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னாரு…

ஜாரியா அக்கா: என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

ஜாரியா அக்கா: எத்தனை பேரு

ஆகாஷ் : ரெண்டு பேரு

ஜாரியா அக்கா : கூப்டுட்டு வந்தீங்களா…

ஆகாஷ் : வந்தேனே…

ஜாரியா அக்கா : ஒருத்தரு இங்க இவருகிட்ட இருக்காரு, இன்னொருத்தருஎங்க…

ஆகாஷ் : அட, இன்னொருத்தருதாம்மா இது…

பாலாஜி மாம்ஸ் : அடேய், மறுபடியும் மறுபடியும் அதே சொல்றான்டா…

ஜாரியா அக்கா : இந்தா, இந்தா, இந்தா சத்தம் போட்டு அசிங்கம் பண்ணாதீங்க…ஒரு ஆளு குறைஞ்சதுக்கு இவ்ளோ பெரிய சண்டையா…

பாலாஜி மாம்ஸ் : ஏய்.! என்ன ஆளைச் சாதாரணமா சொல்லிட்ட… ஆளுதானேபெரிய விஷயம்… ஒத்தை ஆளால எத்தனை பிரெண்ட்ஸுங்க பிரெண்டிஷிப்பிரிஞ்சு ஒருத்தன் டாஸ்மாக் போறான், ஒருத்தன் தேவதாஸா சுத்துறான்… அதுலவ் பண்ற ஆளு… இது நகர்வலத்துக்கு ஆளு. ஆனா பிரச்சினை எல்லாம் ஒன்னுதான்…

பாலாஜி மாம்ஸ் : (எல்லோரையும் பார்த்து சாந்தமாய்) விடுங்கைய்யா, நீங்கவிடுங்கைய்யா…


காட்சி 7 : ஆகாஷுடன் பாலாஜி மாம்ஸ்.

பாலாஜி மாம்ஸ் : (ஆகாஷைப் பார்த்து குனிந்தவாறு) டேய், வாடா இங்க… நான்உன்கிட்ட என்ன சொன்னேன்…

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னீங்க…

பாலாஜி மாம்ஸ் : எத்தனை பேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்…

ஆகாஷ் : ரெண்டு பேரு…

பாலாஜி மாம்ஸ் : என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

பாலாஜி மாம்ஸ் : நகர்வலத்துக்கு எத்தனை பேரு

ஆகாஷ் : ரெண்டு பேரு

பாலாஜி மாம்ஸ் : குழுமத்துல போய் கூப்டியா…

ஆகாஷ் : கூப்டனே…

பாலாஜி மாம்ஸ் : குழுமத்துலர்ந்து வந்தாங்களா…

ஆகாஷ் : வந்தாங்களே…

பாலாஜி மாம்ஸ் : எத்தனை பேரு வந்தாங்க…

ஆகாஷ் : ரெண்டு பேரு வந்தாங்க..

பாலாஜி மாம்ஸ் : ஒருத்தரு இதோ, இங்க இருக்காரு… இன்னொருத்தருஎங்கே…

ஆகாஷ் : இன்னொருத்தரு தான்யா இது…

பாலாஜி மாம்ஸ் : அடேய், உன்னைக் கொல்லாம விட்டேனாபார்ரா(துரத்துகிறார்)…

ஜாரியா அக்கா : அடிக்காதீங்க… அடிக்காதீங்க… (பின்னால் ஓடியபடி)…


- திரை விழுகிறது.

No comments:

Post a Comment