மதியப் பொழுதில்
அவசரமாய் ஊர்ந்து செல்கையில்
பிடி தளர கட்டுப்பாட்டை இழந்து
பொத்தென விழுந்தது அது.!
அவசரமாய் வீட்டினுள் புகுந்து
பலனைத் தேடுகிறான் இவன்...
உயிர்பிழைத்த மகிழ்வோடு
இருப்பிடம் திரும்பி தன் கைப்பசையை
சரி செய்து கொண்டிருக்கிறது அது...
அடுத்த முறை விழாமல் இருக்க.!
No comments:
Post a Comment