கதை சொல்லி
தூங்க வைத்ததாய்
உடனுறங்கும் குழந்தை
மழலையில் தாய்...
சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...

இதுவரை யாரும் எழுதா எழுத்தால்
உன்னுள் என்னை உணர்ந்திடச் செய்து
என்னை உனக்கே தந்திட எண்ணி
என்னுள் எழுத்தைத் தேடித் தேடி
எழுத்தே கிடைக்கா ஏழையாய் நின்று
எண்ணம் சொல்ல வழி அறியாது
கண்கள் இருளும் குழப்பத்தில் இன்றும்
எழுதிட அமர்ந்தேன் எழுத்துக்கள் இன்றி…