Thursday, January 28, 2010

எழுதப்படாத எண்ணம்


இதுவரை யாரும் எழுதா எழுத்தால்

உன்னுள் என்னை உணர்ந்திடச் செய்து

என்னை உனக்கே தந்திட எண்ணி

என்னுள் எழுத்தைத் தேடித் தேடி

எழுத்தே கிடைக்கா ஏழையாய் நின்று

எண்ணம் சொல்ல வழி அறியாது

கண்கள் இருளும் குழப்பத்தில் இன்றும்

எழுதிட அமர்ந்தேன் எழுத்துக்கள் இன்றி…

1 comment:

சிட்டுக்குருவி said...

டெலஸ்கோப் வச்சு தேடுங்க நிறைய கிடைக்கும்

Post a Comment