Friday, January 8, 2010

பார்த்தால் பசுமரம் - வரிகள் மாற்றப்பட்டது

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…



கண்களாலே பேசிக்கிறோம் நாலு மாசமா

அதை சொல்லாமலே மூடிவைச்சா காதலாகுமா

நாள்முழுதும் காத்திருக்கும் என்னைப்பாருமா

நீயும் கண்டுக்காம போனா இந்த ஜீவன்வாழுமா

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…

பொய்யும் புரட்டும் சொல்லிப் பலரும் காதலிப்பாங்க

நீயோ, நடந்துபோக பின்னால் வந்து பேசிப்பார்ப்பாங்க

காதல்கடிதம் திரும்பதிரும்ப கொடுத்துநிப்பாங்க

நீயும் திருமணத்தின் பேச்செடுத்தா ஓடிப்போவாங்க

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…


காதலதை எனக்குத் தர தயங்கலாகுமா

அடி காதலியே உன் மனதில் இன்னும் குழப்பமா

மனமிரண்டும் ஒத்தபின்னும் மௌனமாகுமா

மனதின்காதல் சொல்லியென்னைநீயும் வாழவையம்மா…

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…

1 comment:

settaikkaran said...

வாத்தியாரே, வாத்தியாரே!

ஷகீலா கண்ணாலத்தன்னிக்கு ஒரு வாழ்த்துமடல் பாடலாமுன்னு ஆசையாயிருக்கு. இதே மாதிரி சினிமாப்பாட்டு மெட்டுலே ஒண்ணு எழுதிப்போடுங்க வாத்தியாரே! நான் என்னுதுன்னு சொல்லிக்குவேன், பரவாயில்லியா?

Post a Comment