Monday, January 25, 2010

உடனடித் தேவை

அழுகின்ற பிள்ளைக்கு
அம்மாவின் அமுதுணவு
உடனடித் தேவை…

பாலர் பருவத்தில்
பள்ளிதரும் படிப்பறிவு
உடனடித் தேவை…

வாலிபர்தாம், தலைநிமிர்ந்து
வாழ்ந்திடவோர் வேலையது
உடனடித் தேவை…

வாஞ்சையோடு பார்த்துக்கொள்ள
வயோதிகர்க்கு பிள்ளையன்பே
உடனடித் தேவை…

பட்டினியால் தவிப்போர்க்கு
பசிதீர்க்க உணவதுவே
உடனடித் தேவை…

மானங்காக்க உடலதனை
மறைத்திடவே உடைகளுந்தான்
உடனடித் தேவை…

தவிக்கின்ற எம்மீழத்
தமிழனுக்கு தனிஈழம்
உடனடித் தேவை…

குண்டுமழை பொழிகின்ற
காஷ்மீரில் அமைதியுந்தான்
உடனடித் தேவை…

இம்மாற்றங்கள் நிகழ்ந்திடவே
மனிதனாய் பிறந்திட்டோர்
மனந்தனிலே மனிதத்தன்மையே
உடனடித் தேவை…

1 comment:

Post a Comment