Monday, January 4, 2010

இரண்டு மனம் வேண்டும்- வரிகள் மாற்றப்பட்டது

மௌனமுடைக்க ஒரு வழி தெரிந்தால்

மௌனம், உடைத்து விடலாம் – அவளின்

மனதையறிய ஒரு வழி தெரிந்தால்

காதலித்து விடலாம் – ஆனால்

தெரியவில்லையே ஒரு வழி – நான் என்ன செய்வேன்.

காதல் வரம் வேண்டி

காதலியைக் கேட்டேன்

மௌனத் தடை வென்று

காதல் சொல்வாய் இன்று

காதல் வரம் வேண்டி

காதலியைக் கேட்டேன்

மௌனத் தடை வென்று

காதல் சொல்வாய் இன்று

காதல் வரம் வேண்டி….

கண்ணும் கண்ணும் கலந்தபின்னால்,

கருத்தும் கருத்தும் கலந்தபின்னால்

கண்ணும் கண்ணும் கலந்தபின்னால்,

கருத்தும் கருத்தும் கலந்தபின்னால்

உள்ளம் இரண்டும் சேர்ந்தபின்னால்

உள்ளம் இரண்டும் சேர்ந்தபின்னால்

மொனப் பூட்டைப் போடாதே!

கண்களின் மொழியோ உள்ளம் மொழி

உள்ளத்தின் மொழியோ மௌன மொழி

கண்களின் மொழியோ உள்ளம் மொழி

உள்ளத்தின் மொழியோ மௌன மொழி

மௌனத்தின் மொழியே காதல் மொழி

மௌனத்தின் மொழியே காதல் மொழி

காதலை அறிய என்ன வழி…

காதல் வரம் வேண்டி

காதலியைக் கேட்டேன்

மௌனத் தடை வென்று

காதல் சொல்வாய் இன்று

காதல் வரம் வேண்டி

காதலியைக் கேட்டேன்

மௌனத் தடை வென்று

காதல் சொல்வாய் இன்று

காதல் வரம் வேண்டி…

No comments:

Post a Comment