பிரசாத்: “புசிக்க உணவைப் படைத்திடு தாயே
பசியால் தவிக்கும் எனக்கு”
இலட்சுமி: “அதிசயம் என்ன குழந்தாய்; பகர்வாய்
மதியம்நீ உண்டாயா என்று”
பிரசாத்: “தேன்சுவை விஞ்சும் உணவதை நானுமே
வீன்செய்யா(து) தின்றேன்;அம் மா”
இலட்சுமி: "தட்டினில் சூடாய் இருக்குது இட்லியும்;
சட்னிசேர்த்து மிச்சமின்றி உண்”
பிரசாத்: "உண்டு முடித்ததும் அம்மா; விளையாடச்
சென்று வருகிறேன் நான்".
இலட்சுமி: " பாடம் எழுதி முடித்திடு சீக்கிரம்
ஆடலாம் ஆட்டம் பிறகு."
பிரசாத்: " விளையாடி வந்தே எழுதி முடிப்பேன்
பிழையின்றி பாடமதை நான்."
இலட்சுமி:" அப்பா வருமுன்பு ஆடிவிட்டு; நேரமது
தப்பாமல் வீட்டிற்கு வா."
இப்படி எல்லா விஷயத்தையும் வெண்பா வடிவில் சொல்லலாம். இதே போல இன்னுமொரு பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
1 comment:
நல்ல முயற்சி அண்ணா... வெண்பான்னு சொன்னாலே தமிழ் பாட புத்தகத்தில் மட்டுமே படிச்ச ஞாபகம்.
ஆனால் இவ்வளவு ஈசியா? நல்லா இருக்கு.
Post a Comment