Friday, June 10, 2011

குழ்ந்தைப் பாடல் - 1

ஜவ்வு மிட்டாய் மாமா
கூவும் ஓசை கேட்டது
கூவும் ஓசை கேட்டதும்
ஓடிச் சென்று தேடினேன்...

கையில் கட்டும் வாட்சுபோல்
காதில் போடும் தோடுபோல்
கழுத்து மணி மாலைபோல்
பத்து மிட்டாய் வாங்கினேன்...

எனக்கு பிடித்த உருவத்தில்
இனிக்கும் ஜவ்வை வாங்கியே
எச்சில் ஒழுக பார்த்துநான்
வீட்டை நாடி ஓடினேன்...

வீட்டில் வந்து சேர்ந்ததும்
சுவைத்துப் பார்க்கும் வேளையில்
சின்னத் தம்பி வந்துஎன்
மொத்த ஜவ்வைப் பிடுங்கினான்...

ஆசை வைத்த ஜவ்வது
இல்லை என்று ஆனதும்
அம்மா பேரைச் சொல்லியே
வீடு அதிர தேம்பினேன்...

ஓடி வந்த அம்மாவோ
ஏன்டி இந்த அழுகையோ
என்று விஷயம் கேட்டுபின்
பகிர்ந்து இனிப்பைத் தந்திட்டாள்...

தம்பி பாதி தின்கிறான்
நானும் பாதி தின்கிறேன்
பிணக்கு தீர்ந்து நாங்களும்
இனிக்கும் ஜவ்வாய் ஆகினோம்...

நன்றி : இக்கவிதைக்குக் கரு கொடுத்த புதுகை அப்துல்லா அவர்களுக்கும், அக்கருவை என் கண்ணில் காட்டிய VIDHOOSH அவர்களுக்கும்...

3 comments:

Post a Comment