சின்ன சின்ன மழைத்துளி
சினுங்கும் ஓசை மழைத்துளி
ஓட்டின் மீது விழுகுது
சோளப் பொறியாய் வெடிக்குது
மெல்ல மெல்ல நடக்கிறேன்
மெதுவாய் கதவைத் திறக்கிறேன்
கூரை சிந்தும் மழையை நான்
கின்னம் வைத்துப் பிடிக்கிறேன்
தாளம் மழை போடுது
வானம் வெடி போடுது
வானம் வெடி போடையில்
பூமிப் பந்து மிளிருது
மின்னல் இடி கண்டுநான்
மிரண்டு உள்ளே ஓடினேன்
அன்னை மடி தேடிநான்
6 comments:
very nice.
include in tamilmanam and tamilish
அருமையாய் பாடல் வந்துள்ளது
நன்றி அக்கா...
நன்றி யாதவன் சார்...
குழந்தைப்பாடல் மொழி இனிக்கிறது...
நன்றி கவிதை வீதி சௌந்தர் அவர்களே...
Post a Comment