//
வெறி அடங்கி மதி தெளியும் பொழுது மீள முடியாத பழியைச் சேர்த்திருப்போம்.
அட, இதே கருத்தோடு ஏதோ வரிகள் தொலைக்காட்சியில் ஒலிக்கிறதே...
உண்மை தானே நமது தோல்வியின் வெறியில் நமது செயல்பாடுகள் காசு பணத்தையா கரைக்கப் போகிறது. பெயரைத்தானே.! ஒரு முறை பெயர் கெட்டு விட்டால் கெட்டுப் போனது தானே...
ஏனோ அப்பாவின் அறிவுரையும் இச்சமயம் நினைவில் வருகிறது...
//
ஹ்ம்ம்... இதுவும் உண்மை தானே... என்ன நான் சொல்றது...
தோல்வி மனிதனுக்கு வெறி மூட்டும்
வெறியில் மதி மாறும்
எதிரி அது சமயம் இடம் கண்டு இடிப்பான்
வெறி மேலும் வீங்கும்
நெறி கெட்டு அறம் விட்டு தடம்
மாறி
படுகுழியில் வீழ்வான்... இல்லை
எதிரி வீழ வைப்பான்
//
.
மடிகணினியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
கர்ணன் பட வசனம்.
எத்தனை ஆழமான வார்த்தைகள். எந்த
விஷயத்தில் ஆகட்டும், நமக்கு ஏற்படும் தோல்வி நம்முள் ஒரு வெறியை உருவாக்கி விட்டுத்தானே
செல்கிறது. மனம் தடுமாறும் அந்த ஒரு நிமிட வெறியை எதிரி கண்டு கொண்டு இடித்து விடுவானானால்
மேலும் அவ்வெறி கூடி நாம் இன்னது செய்கிறோம் என அறியாமலேயே படுகுழியில் வீழ்ந்திடுவோம்.
எதிரி நம்மை வீழ்த்தி இருப்பான்.
வெறி அடங்கி மதி தெளியும் பொழுது மீள முடியாத பழியைச் சேர்த்திருப்போம்.
அட, இதே கருத்தோடு ஏதோ வரிகள் தொலைக்காட்சியில் ஒலிக்கிறதே...
//
காசு பணமெல்லாம் கரைஞ்சா திரும்பும்
பேரு போனா திரும்பாது...
//
உண்மை தானே நமது தோல்வியின் வெறியில் நமது செயல்பாடுகள் காசு பணத்தையா கரைக்கப் போகிறது. பெயரைத்தானே.! ஒரு முறை பெயர் கெட்டு விட்டால் கெட்டுப் போனது தானே...
ஏனோ அப்பாவின் அறிவுரையும் இச்சமயம் நினைவில் வருகிறது...
//
மகனே.! நல்லவன்னு பேரு வாங்கறது
கஷ்டமில்லை, அதைக் காப்பாத்தறது தான் கஷ்டம்... ஏன்னா, நீ செய்யும்/சொல்லும் ஒரு செயல்/சொல்
கெட்டதா இருந்ததுனா அதுநாள் வரை நீ பாடுபட்டு சேர்த்து வைச்சிருந்த நல்லவன்ற பேரு அத்தோட
காணாமப் போயிடும். அதுக்கு பிறகு நீ எப்பவுமே கெட்டவன் தான்...
//
ஹ்ம்ம்... இதுவும் உண்மை தானே... என்ன நான் சொல்றது...
No comments:
Post a Comment