Wednesday, March 17, 2010

கிறுக்கல் - 33

மனம் முழுதும் வியாபித்து
தொடாத தொட்டாற் சிணுங்கியாய்
சொல்ல துடித்த கவிதைகள்
தென்றலாயுன் பார்வையின் ஸ்பரிசத்தில்
சுருங்கிய தொட்டாற் சிணுங்கிபோல்
பிணைந்து குழறிய வார்த்தைகளாக
பார்வையின் ஸ்பரிசம் மறைய
மெதுமெதுவாய் மீண்டும் கவிதையாகி
மனதை அணுஅணுவாய் ஆக்கிரமிக்க
சொல்லாமல் கொல்லப்படுகிறது நம்காதல்...

4 comments:

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

நல்ல பகிர்வு நண்பரே .
கடந்த ஒவ்வொன்றும் மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது .

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள்
. அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .

மீண்டும் வருவான் பனித்துளி !

பிரசாத் said...

நன்றி நண்பரே... word verification இருக்காதே...

காயத்ரி said...

கவிதை மிகவும் அருமை நண்பரே..

Post a Comment