Wednesday, January 4, 2012

விதையாவோம்

சமீபத்தில் பார்த்து மனதை அதிகம் சலனப்படுத்திய படம்... எங்கேயும் எப்போதும்... இங்கு பலரும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். பல வித எண்ணங்கள் தோன்றியும் இருக்கலாம் இப்படத்தைப் பார்த்ததும்...

விபத்து எங்கேயும் எப்போதும் நிகழலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் படத்தின் தலைப்பும், அவ்வாறு விபத்தில் இறந்தாலும் நாம் வாழ நம் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க முடியும் என்ற செய்தியுடன் படம் முடிவதும் என்னுள் ஏதோ செய்து கொண்டிருக்கிறது இன்னும்...

படத்தின் இறுதிப்பாடல்(இறுதிக்காட்சி) உயிர் அறுந்ததே... உடல் விழுந்ததே... மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது... அந்த இசை காதை விட்டு அகல இன்னும் மறுக்கிறது... இவ்வளவு பாதித்த இசையில் கண் தானம் பற்றியும், உடல் உறுப்பு தானத்தைப் பற்றியும் சொன்னால் என்ன என்று தோன்றியது... அதன் விளைவே இந்த வரிகள்...

உயிர் விழுந்திட உடல் அழுகுமே
ம்ம்ம்ம்ம்ம்….
ஓ…. எரிந்திடும் உடல் உயிர் வழங்குமே
ஓஓஓ…. விழிகளைத் தந்தே விதைத்திடு உன்னை
நாம் உடலினைத் தந்தே உறங்குவம் மண்ணில்
ஓஓஓஓஓ……
இது மண்ணிலே மாயும் கூடு
உன்னை தானம் ஆக்கி வாழு.!
உயிர் விடும் முன்னே….

இவ்வரிகளை எங்கேயும் எப்போதும் படக்குழுவிற்கு மானசீகமாக சமர்ப்பிக்கிறேன்...

No comments:

Post a Comment