Wednesday, January 4, 2012

சமாதானம்

கத்தி குண்டு கையிலே
எடுத்துக் கொண்டு வாழ்விலே
கலகம் செய்து பாரையே
எரித்து வாழும் வீனரே...

உங்கள் நன்மைக் காகவும்
உலக நன்மைக் காகவும்
நல்ல மொழி ஒன்றைநான்
சொல்லு கின்றேன் கேளிரே...

கலகம் நினைக்கும் மனத்தினில்
கணக்காய் அன்பை நிறுத்திடீர்
மீறி கலகம் வந்திட
வெள்ளைக் கொடியில் பேசிடீர்...

அழிக்க நினைக்கும் வைரியும்
எதிர்த்து நிற்கும் படைகளும்
அமைதி வழி நாடிட
அடங்கிப் போவர் அறிவிரே...

பிறப்பும் இறப்பும் ஒருமுறை
நமக்கு நாமே வரையறை
புரிந்து நிற்க நடைமுறை
வணங்கி நிற்கும் தலைமுறை...

No comments:

Post a Comment