Thursday, September 13, 2012

முத்தொள்ளாயிரத்தில் இருந்து ஒரு பாடல்

புல்லாதார் வல்லே புலர்கென்பார்; புல்லினார்
நில்லாய் இரவே நெடிதுஎன்பார் நல்ல
விராஅமலர்த் தார்மாறன் ஒண்சாந்து அகலம்
இராஅளிப் பட்டது இது

இரவை கண்டு இரக்கப்படுகிறாள் ஒரு மாது... யார் அவள்... பாண்டியனைப் பிரிந்து வருத்தத்தில் இருக்கும் மாது, தன் சோகத்தை மறைக்க இரவை ஏளனம் செய்து பாடுவதாக அமைகிறது இந்த பாடல்.
 
சே, காதல் படுத்தும் பாடு தான் என்ன...

இந்த மாது சொல்கிறார், தன் துணையைத் தழுவாதவங்க/ தழுவ முடியாதவங்க இந்த இரவு சீக்கிரம் போயிட கூடாதா, நாளை பகல் பொழுது சீக்கிரம் வந்துட்டா தன் காதலனை பார்க்கலாமேனு இரவைச் சீக்கிரம் போகச் சொல்லுவாங்களாம்...

தன் துணையைத் தழுவியவாறு இன்புற்று இருக்கும் பெண்கள், விடிஞ்சா எங்க தன்னோட கணவன் தன்னை விட்டுப் போயிடுவானோனு வருத்தத்தோட இரவே நீ அப்படியே இன்னும் ரொம்ப நேரத்துக்கு இரேன்னு கெஞ்சி கேட்பாங்களாம்...
 
இதை ரெண்டத்தையும் சொல்லி, மலர் மாலையையும் சந்தணத்தையும் தடவி இருக்கும் மங்கை ஒருத்தி இரவைப் பார்த்து உன்னோட நிலைமை தலைவனை விடவும் முடியாம, தலைவன் கூட பேசவும் முடீயாம இருக்குற நிலைமையை விட மிகவும் இரக்கத்துக்குரியதா இருக்கேனு கேலி செய்றாங்களாமாம்...
 
ஹ்ம்ம், இந்த பொண்ணுங்க தன்னோட கஷ்டத்தை மறக்க அடுத்தவங்க கஷ்டத்தைச் சொல்லி சந்தோஷப்படுவாங்களோ எப்பவுமே... நீங்க என்ன நினைக்கறீங்க...

No comments:

Post a Comment