Monday, September 24, 2012

சந்தர்ப்பம்

இரவை மட்டுமே பார்த்திருப்பவன்
விண்மீணைச் சிலாகிக்கிறான்...
எத்தனைச் சூரியன்கள்.!

பகலைப் மட்டுமே பார்ப்பவன்
சூரியனைச் சிலாகிக்கிறான்...
ஒன்றே நன்று.!

இரவிற்கான
பகலின் விண்மீணாய்
பகலிற்கான
ஒற்றைச் சூரியனாய்
வலம்வர காத்திருக்கிறேன்...

பகல் விண்மீணாயும்
இரவுச் சூரியனாயும்
புடம் போட்டபடி...

எனக்கான காலம் நோக்கி.!

No comments:

Post a Comment