Thursday, September 13, 2012

தனுஷ்கோடி

எண்ணற்ற கனவுகளோடும்
எஞ்சிய நினைவுகளோடும்
உறங்கிக் கொண்டிருந்தவர்கள்
ஆர்ப்பரித்த புயலால் அமைதியாக உறங்குகிறார்கள்...
ஆழ்கடலில்.!
அழிந்து போனவர்களும்
மறைந்து போனதும்
எழுப்பிய கூக்குரல் தொடர்ச்சியின் நீட்சி
விம்மலாய் கரைக்கு வந்து சொல்கிறது...
கதைகளாய்.!
எஞ்சியிருக்கும் மனிதர்க்கும்...
மிஞ்சியிருக்கும் மாற்றத்திற்கும்...

No comments:

Post a Comment