எண்ணற்ற கனவுகளோடும்
எஞ்சிய நினைவுகளோடும்
உறங்கிக் கொண்டிருந்தவர்கள்
ஆர்ப்பரித்த புயலால் அமைதியாக உறங்குகிறார்கள்...
ஆழ்கடலில்.!
அழிந்து போனவர்களும்
மறைந்து போனதும்
எழுப்பிய கூக்குரல் தொடர்ச்சியின் நீட்சி
விம்மலாய் கரைக்கு வந்து சொல்கிறது...
கதைகளாய்.!
எஞ்சியிருக்கும் மனிதர்க்கும்...
மிஞ்சியிருக்கும் மாற்றத்திற்கும்...
No comments:
Post a Comment