Thursday, September 13, 2012

அவள்

அத்த பொண்ணா எனக்கு ஆசையக் காட்டி
மனசை என்னுள்ளார தச்சுட்டு போன..
மிச்சம் மீதியின்னு ஏதும் இல்லாம
என்னை உன்னுள்ளார அள்ளிட்டுப் போன...

கையப் புடிச்ச நாளு முதலா
காலைப் பொழுதைஉன் கண்ணில் முழிச்சேன்...
ஓடி ஆடி என் வேலைய முடிச்சு
மிச்சப் பொழுதைஉன் நெஞ்சில் கழிச்சேன்...

மஞ்சம் சேர்ந்தஎன் மாமன் மவளே
என்னை விட்டுட்டு நீ எங்கடீ போன...
என்ன செய்யுவேன் ஏது செய்யுவேன் ..
எங்கே தேடிநான் உன்னைச் சேருவேன்...

பெத்தவ வீட்டுக்கு சொல்லிட்டு போவ...
மத்தவ வீட்டுக்கும் சொல்லிட்டு போவ...
இத்தனை நாளில் இன்னைக்கு மட்டும்
சொல்லாம கொள்ளாம எங்கடீ போன...

ஒத்த வார்த்தையில சொல்லிட்டுப் போடீ - இல்லை
என்உசுருக்கும் கொள்ளியை வச்சுட்டுப் போடீ...
போன வழியெது காட்டிட்டுப் போடீ...
நானும் அங்குவாரேன் உன்னையத் தேடி...

No comments:

Post a Comment