படிப்பில்
முனைவருமில்லை
அரிச்சுவடியுமில்லை...
பதவியில்
உயர்ந்துமில்லை
கடையிலுமில்லை...
வருவாயில்
பணக்காரனில்லை
ஏழையுமில்லை...
என்ன கொடுமை இது...
வாழ்க்கையில் மட்டுமல்ல
நடக்கும் வழியிலுமா இப்படி...
வேகமாய்ச் செல்லும் நண்பர்கள் நால்வர்
ஆமையாய்த் தங்கும் நண்பர்கள் நால்வர்
முன்செல்லவா
பின்தங்கவா...
முன்னவருடன் சேர்ந்தால்
பின்னவர்க்கு கோபம்...
பின்னவருடன் தங்கினால்
முன்னவர்க்கு வருத்தம்...
முடிவு செய்து விட்டேன்...
தனிமையே என்றாலும்
திரிசங்கே நிம்மதி தான்.!
No comments:
Post a Comment